FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, March 14, 2017

திரைப்படப்பாடல்களில் "மவுத்தார்கன்- (Mouth Orgon)" ஹார்மோனிகா :- வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-03 / 108 (Episodu-03 of 108) :-

"மவுத்தார்கன்-(MouthOrgon)"ஹார்மோனிகா:- திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக் கருவிகளின் பங்கு பகுதி-03 / 108 (Episodu-03 of 108) :- 

"மவுத்தார்கன்- (MouthOrgon)" என்று அழைக்கும் வாய் உதடுகளின் நடுவில் வைத்து ஊதும் துளை இசைக்கருவி  பற்றிய சிறப்பு பகுதியையும், திரையிசையில் மவுத்தார்கன் வாத்தியக்கருவியின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவு. "மவுத்தார்கன்" இதற்க்கு ஹார்மோனிகா என்கிற மற்றொரு பெயரும் உள்ளது. 
திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- "மவுத்தார்கன்- (MouthOrgon)"ஹார்மோனிகா பகுதி-03 / 108 (Episodu-03 of 108) என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்" (https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம்.  வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன்.   நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   

மவுத்-ஆர்கன்(Mouth-Orgon) என்று அழைக்கப்படும் ஹார்மோனிகா:-
நமது பழைய தமிழ் திரைப்படங்களில் 1950 கலீல் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் வாத்திய இசைக்கருவியாக திரைப்படத்திலும் பிரபலப்படுத்தப்பட்ட எளிமையான கையடக்க வாத்தியம் மவுத்-ஆர்கன் (Mouth Orgon) என்று அழைக்கப்படும் ஹார்மோனிகா. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபலமாகி, ஆப்ரகாம் லிங்கன், சேகு வேரா போன்ற தலைவர்களாலும் வாசிக்கப்பட்ட வாத்தியம்.

மவுத்-ஆர்கன்(Mouth-Orgon) என்று அழைக்கப்படும் ஹார்மோனிகா பற்றிய கூடுதலான ஒரு செய்தியாக:- 
1. இந்தியாவில் வழக்கொழிந்த வாத்தியங்களில் ஒன்றான ஹார்மோனிகாவைச் சிறு வயதிலிருந்தே நேசிக்கவும் வாசிக்கவும் தொடங்கிவிட்டவர் பபிதா பாசு. கொல்கத்தாவில் இருக்கும் இவர், இன்றைக்கு வட கிழக்காசியாவிலேயே பெயர் சொல்லும் ஹார்மோனிகா வாத்தியக் கலைஞராக பிரகாசித்துக்கொண்டிருப்பவர்.
இந்திய ஹார்மோனிகா அமைப்பின் சார்பாக ரவீந்திர சங்கீதம், திரையிசை, மேற்கத்திய இசை என மூன்று பிரிவுகளிலும் சிறந்த கலைஞருக்கான விருதைப் பெற்றிருப்பவர். ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு பிறந்த நாளுக்காக, தாகூரின் புகழ்பெற்ற பாடல்களை ஹார்மோனிகாவில் வாசித்து ஒரு இசை ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இதுதவிர, கன்ஃபுளுயன்ஸ், ஹார்மோனிகா ஆஃபரிங் போன்ற இசை ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

2. தமிழகத்தின் திருநெல்வேலியச் சேர்ந்தவர் திரு.பட்டாபிராமன் மவுத்தார்கன்னும் அவரும் எப்போதும் சேர்ந்தேயிருப்பார்களோ என்று என்னத்த தோன்றுமளவுக்கு,  அவருக்கு மவுத்தார்கன் வாசிப்பது என்பது அவரின் உயிர் மூச்சுக்காற்றில் கலந்துவிட்ட ஒன்று. நிறைய திரைப்படப்பாடல்களை தனது மவுத்தார்கன்னில் பாடி அவரது யூடுப் சானல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். http://tamilbloggersunit.blogspot.in/


3. ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் திரு முருகன் கோவிலில் "ஒளவை"  என்கிற பெயர் கொண்ட கோவில் யானை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டது அந்த கோவில் யானை தினமும் மவுத்தார்கன் வாசிக்கும் திறன் கொண்ட கோவில் யானை என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.



4. இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு மவுத்தார்கன் வாசிப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்காக கொண்டவர் அவரை  மவுத்தார்கன் களைஞன் என்றும் கூறுகிறார்கள்.

5.    "மவுத்தார்கான் எனும் இசைக்கருவி எங்கள் பால்யத்தின் ஈரஉதடுகள் பதியாத இடமில்லை". என்று சொல்லுமளவுக்கு சிறுவயதிலிருந்தே நம்மோடு இணைந்துவிட்ட ஒரு எளிமையான இசைக்கருவி இது.

6. ஹார்மோனிகா என்னும்  மவுத் ஆர்கனை வாசிப்பது என்பது அத்தனை எளிதான செயல் அல்ல. உதடுகளில் பொருத்தி, மூச்சை அடக்கி வாசிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். நாதஸ்வரம் போல். இதற்குள் ஒரு இலக்கணத்துடன் ஸ்ருதியுடன் சப்தம் (ஒலி) நாதம் எழுப்புவது என்பது மிகவும் சிரத்தையுடன் முழுப்பயிற்சியுடன்கூடிய விடா முயற்ச்சியும் வேண்டும்.  

7. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் இந்தூர் பகுதியில்  2015 அக்டோபர் மாதம்,  ஒரே இடத்தில் ஒன்று கூடி வாசித்து, 200 மவுத் ஆர்கன் இசைக் கலைஞர்கள் உலக சாதனை படைத்தனர்.
இந்திய ஹார்மோனிகா  சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் திரு. ராஜேந்திரசிங் பன்கூரா கூறுகையில், ‘‘இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் மவுத் ஆர்கன்  வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற 200 இசைக் கலைஞர்கள் ஒரே மேடையில் கூடி வாசி்த்தனர். ஏழு இந்தி் பாடல்களை மூன்று நிமிடங்கள் மவுத் ஆர்கனில் வாசித்து கலைஞர்கள் சாதனை படைத்தனர்’’ என்றார். இந்நிகழ்ச்சியை பல நகரங்களிலிருந்து வந்த  ஏராளமானவர்கள் கேட்டு ரசித்தனர்.

திரையிசையில் ஹார்மோனிகா என்னும் மவுத்தார்கன் இசைக் கருவியின் இசையால் பல திரைப்படப்பாடல்கள் பலரது மனங்களிலும், அன்றும், இன்றும், என்றும் அழியாத இடம்பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.இன்றய இந்த நிகழ்சியில் / பதிவில், திரைப்படப் பாடல்களில் ஹார்மோனிகா இசையின் பங்கு பற்றி தெரிந்துகொள்ளலாம். 

பழைய பாடல்கள் வரிசையில்:-
1) 1959 ஆம் ஆண்டு வெளியான "கைதி கண்ணாயிரம்" திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் புலவர் மருதகாசி அவர்களின் இந்தப்பாடலில் இசையமைப்பாளர்  கே.வி. மஹாதேவன் அவரால்  "மவுத்தார்கன்" இசைக்கருவியை பாடலிலும்,  படத்தின் பாடல் காட்சியிலும் வருமாறு பாடலை சிறப்பித்திருப்பார்.  பாடல்:- கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும். வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்... பாடலைப் பாடியவர்கள்  பி. சுசீலா அவர்களும், அவருடன் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் பாடியுள்ளனர். https://youtu.be/uso_r4Sz3tM

2) காதலனின்  உணர்வைப் பாடலின் தொடக்கத்திலேயே கவியரசு கண்ணதாசன் சொல்லிவிடுவார். அதற்க்கு மெருகூட்டும் வண்ணன் இசை மன்னர்  விஸ்வநாதன், ராமமூர்த்தி அவர்கள் பாடலின் ஆரம்பத்திலேயே புல்லாங்குழல் ஊதி ஆரம்பித்து தொடர்ந்து "மவுத்தார்கன்" கிட்டார், வயலின் என்று வரிசையாகத் தொடரும் இசைக் கருவிகளுக்குப் பிறகு, மென்மையுடன் வளமான வயலின் கூட்டிசை ஒலிக்கும். இப்பாடலைக் கேட்கும்போது அந்த நேரத்தில் நம் மனது உணரும் உணர்வுகள் வார்த்தையில் அடங்காதவை
பாடல்:-காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
படம்: பாவ மன்னிப்பு, இசை :-விஸ்வநாதன், ராமமூர்த்தி, பாடல் வரிகள்:- கவியரசு கண்ணதாசன், பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்
 https://youtu.be/lEcwt7nnw0U

3) கண்ணதாசனின் வரிகளில், விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில், கவலையில்லாத மனிதன் திரைப்படத்தில் அமைந்த இந்த சோகமான பாடலிலும் மவுத்தார்கன் இசையில் சந்திரபாபு அவர்கள் பாடி நடித்த காட்சிகள் பாடலோடு மிக அருமையாக நமது மனங்களையும் வருடிக்கொண்டு போகும் இந்தப்படத்தில் அமைந்த அனைத்துப்பாடலும் மிக அருமையாக, இதமான பாடலாக மைந்திருக்கும். 
பாடல் பிறக்கும்போதும் அழுகின்றாய், இறக்கும்போதும் அழுகின்றாய்,. ஒரு நாளேனும் கவலையை மறந்து சிரிக்க மறந்தாய் மானிடனே.  https://youtu.be/2Goazija6-k

4) பாடல்:-“வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்” என்கிற இந்தப் பாடலில் மவுத்தார்கன் இசையை மிக நேர்த்தியாக கையாண்ட விதம் இசையரசர்  M.s.விஸ்வநாதன் அவர்களுக்கு கைவந்தக்கலை... இந்தப்  பாடல் இடம்பெற்ற படம் : மூன்று முடிச்சு, பாடல் வரிகள் : கண்ணதாசன், குரல் : ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் & m.s.விஸ்வநாதன்.. இத் திரைப்படத்தில் கமல் ஸ்ரீதேவி இருவரும் காதலில் மயங்கி கிடைக்கும் போது வரும் பாடலாதலால் 13 இடங்களில் 'கள்' என்று போதை தரும் வார்தையைப் பிரயோகித்திருப்பார் கவிஞர் கண்ணதாசன்.(காதலும் போதை தருவதனால் தானோ) https://youtu.be/7Q55nVGOofo

இடைக்காலப் பாடல்கள் வரிசையில்
5) திரிசூலம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்  
இந்தப்பாடல் "மவுத்தார்கன்"  ஹார்மோனிகா என்கிற இசைக்கு மிகப் பொருத்தமாக அமைந்த பாடலும், பாடல் காட்சியும் மிகப்பொருத்தமாக நடிகர்திலகத்தின் நடிப்பில், விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் கவிஞ்சர் கண்ணதாசன் பாடல் வரிகளில் உருவான பாடலைப் பாடியவர்கள் கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம். https://youtu.be/7LyOJWJgSzI


6) மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து 1975 ஆம் வருடம் வெளியான மாபெரும் வெற்றிப்படமாக "நாளை நமதே" படத்தின் முதல் பாடலில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் "மவுத்தார்கன்" வாத்தியக்கருவியை பாடலில் இடம்பெறச்செய்து மிக நேர்த்தியாக இந்தப்பாடலுக்கு இசையமைத்திருப்பார்,  பாடலை இயற்றியவர் வாலி , பாடலை பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,டி.எம்.சௌந்தரராஜன் ஆகியோர் இணைந்த இந்தப் படமும் பாடலும் என்றும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இடம்பெற்றிருக்கும் 
பாடல்: அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே... https://youtu.be/02ouCegMfY8

7) ‘இளையராஜா பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிக்கப்பட்ட ‘ஆனந்த கும்மி’ (1983) படம் முழுவதும் பொங்கி வழிந்தது இளையராஜாவின் இன்னிசை. இப்படத்தின் பாடலான குதூகலமும் குறும்பும் நிரம்பித் ததும்பும் குரலில் எஸ்.பி.பி. பாடும் ‘தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி’ பாடல், உற்சாகம் வழியும் இசையமைப்பைக் கொண்டது. மிகத் துல்லியமான ஒலிப்பதிவைக் கொண்ட இப்பாடலில் ஆர்ப்பாட்டமான ட்ரம்ஸ், புத்துணர்வூட்டும் கிட்டார், மவுத்தார்கன், சாக்ஸபோன் என்று இசைக் கருவிகளின் அற்புதமான கலவை இப்பாடலில் உண்டு. 
பாடல்:- தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
https://youtu.be/TZ-R2OArfIc


புதிய படப்பாடல்கள் வரிசையில்:-
8) நடிகர் மோகன் அவர்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் எப்போதும் உண்டு. அவரது படங்களில் வரும் பாடல்களுக்கு ரசிகர்களின் மனதில் என்றும் நீக்காத இடத்தைப்பிடிக்கும் அந்தவகையில்  "மவுத்தார்கன்" என்னும்  ஹார்மோனிகா இசையில் ஆரம்பித்து கங்கை அமரன் அவர்களின் பாடல் வரிகளில் அமைந்த இந்தப் பாடல் மற்றும் இந்தப் படம் முழுதும் ஒரு வசீகரத்தை கொடுக்கும்  இசைக்கருவியை இளையராஜா அவர்கள் பயன்படுத்தியிருக்கும் விதம் இனிமையான அனுபவம். இந்தப்படத்தையும் இந்தப்பாட்டையும் சிறப்பு செய்த "மவுத்தார்கன்"  ஹார்மோனிகா இசைக்கருவி இசைத்த பாடல்களில், இந்தப்பாடலை மிகவும் சிறப்புவாய்ந்த பாடலாக முன்னிறுத்துகிறது 
பாடல்:- நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை.. படம் : குங்கும சிமிழ், இசை : இளையராஜா, பாடலாசிரியர்: கங்கை அமரன், பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்.  https://youtu.be/qjnorxdJ2J8

9) வாலி (1999) படத்தில் வரும் ஓ சோனா ஓ சோனா ஐ லவ் யூ டா ,   என்கிற பாடலில் "மவுத்தார்கன்" இசையைப் இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா அவர்கள் பாடலின் மிக அருமையான சூழலில் நேர்த்தியாக இந்த இசையை பயன்படுத்தியிருப்பார்  படத்தில் கதாநாயகனாக (தலை) அஜித் குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்ரனும், ஜோதிகாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எஸ். ஜே. சூர்யா அவர்கள்  இயக்கியுள்ளார். https://youtu.be/bmnQo4-iRKg 

10) பாடல் "பார்த்த முதல்நாளே உன்னை பார்த்த முதல்நாளே
காட்சிப்பிழைபோலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே"
படம் வேட்டையாடு விளையாடு , ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பு நன்றாக உள்ளதாக பாடலை கேட்ட அனைவரும் இந்தப்பாடலை மனதில் முனுமுனுக்க அரம்பித்தனர்.. அப்படிப்பட்ட  அந்தப் பாடலை சிறப்பான பாடலாக மகுடம் சூட்டவைத்த "மவுத்தார்கன்" ஹார்மோனிகா இசை அனைவரது அடிமனதில் ஆழ ஊறிப்போன பால்ய காலத்து நினைவுகளை அவர்களுக்கு தெரியாமலே இந்தப்பாடலின்"மவுத்தார்கன்"  இசையினால்  மனதை சுண்டி இழுத்தது என்று சொன்னால், பாடலைக் கேட்ட அனைவருமே தமது பால்ய வயதில் "மவுத்தார்கன்"  ஹார்மோனிகா இசையை வாசித்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது .. படத்தில் நடிகர்கள்: கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், இசை: ஹாரிஸ் ஜெயராஜ், இயக்கம்: கௌதம் மேனன், பாடலாசிரியர்: தாமரை, பாடியவர்கள் : உன்னி மேனன், பாம்பே ஜெயஸ்ரீ ..https://youtu.be/chcMmxBMKDM

11) சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த் அவர்கள் நடித்த படையப்பா படத்தில் "மவுத்தார்கன்" இசையை வைத்து  படத்தின் மிக முக்கிய கட்சியை நகர்த்தியிருப்பார்கள். அந்தப்படத்தில் இந்தப் பாடலில் நடிகர் ரஜினிகாந்த அவர்கள் "மவுத்தார்கன்" வாசித்து நடிப்பதாக இருக்கும் இந்தப்பாடலில்  "மவுத்தார்கன்" இசைக்கருவியின் இசையை A.R ரகுமான் அவர்கள் பாடலுக்கு சிறப்புசேர்க்குமாறு இசையமைத்திருப்பார் "சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு, என்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா"  https://youtu.be/IunsCffBuZU

12)  நான் ஈ படத்தில் வரும் இந்தப்பாடலில்  "மவுத்தார்கன்- (Mouth Orgon)" ஹார்மோனிகா :- இசையும் பாடலோடு சேர்ந்து இழையோடுகிறது ..
பாடல் :-வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.
அட அடடடடா – ஓ ஹோ
நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பாடலுக்கு இசை : மரகதமணி, இயக்கம் : ராஜமௌலி, பாடியவர்கள் கார்த்திக், சாஹிதி. https://youtu.be/fLsxFTZw63U

இப்படி "மவுத்தார்கன்" என்கிற ஹார்மோனிகா என்னும் இசைக் கருவியின் அற்புதமான இசையை மற்ற வாத்தியத்திற்கு தகுந்தாற்போல் பல பாடல்களில் இசைக்கப்பட்டு, திரைப்படப் பாடல்களை மேலும் மேலும் மெருகு சேர்த்திருப்பது மறுக்கமுடியாத உண்மை. காலங்களைக்கடந்த இந்த இசைக்கருவிக்கு ரசிகர்களின் மத்தியில் என்றைக்கும் நிரந்தரமான ஒரு இடம் இருக்கும் என்பது திண்ணம். 


மவுத்தார்கன், ஹார்மோனிகா வாத்தியக்கருவியில் மேலும் பல திரைப்படப்பாடல்கள் பழைய பாடல் புதிய பாடல் என வரிசைப்படுத்தப்பட்டு எனது சங்கீத சாம்ராஜ்யம் என்கிற முகநூல் பதிவில் கண்டு ரசிக்கலாம். 


இந்தத்தொடரின் அடுத்த பகுதியில் திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக் கருவிகளின் பங்கு என்ற பகுதியில் நாம் ரசிக்க இருப்பது "ஷெனாய் அல்லது செனாய்" வாத்திய இசைக் கருவி என்பது நாதஸ்வரம்  போன்ற குழல்வகை காற்றிசைக் கருவி. வட இந்தியாவில் திருமணம் போன்ற நன்னாட்களிலும் ஊர்வலங்களிலும் வாசிக்கப்படும் இசைக்கருவி. குழல் போன்ற இக்கருவி, வாய் வைத்து ஊதும் மேற்புறத்தில் இருந்து கீழாக செல்லும் பொழுது குழாய் விரிவாகிக்கொண்டே போவது. இதில் ஆறு முதல் ஒன்பது துளைகள் இருக்கும். இதில் வாய் வைத்து ஊதும் பகுதியில் இரண்டு இரட்டைச் சீவாளிகள் (நான்கு) இருக்கும்.

உசுத்தாது பிசுமில்லா கான் புகழ்பெற்ற செனாய்க் கலைஞர். 
ஓரளவுக்குப் பரவலாக அறியப்பட்ட பிற கலைஞர்கள்: அகமதியா, ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜாஸ் இசைக் கலைஞர் யூசஃவ் லத்தீஃவ். ரோலிங்கு ஸ்டோன் (Rolling Stone) என்னும் இசைக்குழுவில் டேவ் மேசன் என்பவர் 1968 இல் ஸ்ட்ரீட் ஃவைட்டிங் மேன் (Street Fighting Man) என்னும் பாட்டில் செனாய் வாசித்தார்.

திரையிசையில் ஷெனாய் வாத்தியக்கருவியின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவில் பங்குகொண்டு மகிழலாம்.  
பண்டைய திரைப்படப் பாடல்களில் ஷெனாய் இசையை அதிகமாக துயரமான, சோகமான பாடல்களுக்கே அதிகம் பயன்பட்டுள்ளதாக தெரிகிறது ....  

செனாய் / ஷெனாய் வாத்திய இசைக்கருவியின் இசையில் இணைந்து ஹிந்துஸ்தானி இசையில் அமைந்த சிறந்த தமிழ் திரைப்படப் பாடல்களின்  இனிய இசையை   நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

1) இந்தப்பாடலில் பல இசைக்கருவிகளுக்கு இடையே ஷெனாய் இசைக்கருவியின் இசை மிக அருமையாக கலந்து பாடலை சிறப்பு செய்திருக்கும்.  பாடல்:- மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் அதில் மங்கல கீதம் முழங்கும் கவி மன்னவர் காவியம் பொங்கும் அதைக் காதலர் உள்ளம் வணங்கும்..
திரைப் படம்: பார் மகளே பார்,  பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா மற்றும் குழுவினர், இசை எம் எஸ் விஸ்வநாதன், நடிப்பு: முத்துராமன் – விஜயகுமாரி. https://youtu.be/vvJDcqvvVA0 

2) இந்தப்பாடலில் செனாய் இசை பாடலோடு பின்னிப்பிணைத்திருக்கும் அழகே தனி அந்த இசையை மட்டும் தனித்து உணர்ந்து ரசிக்கும்போது அதன் இனிமை மிக ரம்மியமானது.. பாடல்வரிகளோடும் பாடலின் காட்சிகளோடும் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு இசைக்கோர்வை இந்தப்பாடல். பாடல்:- மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன் - நீயும் அச்சத்தோடு விலகி... பாடலின் திரைப்படம்: சாரதா (1962) பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன், இசை: கே.வி. மஹாதேவன். https://youtu.be/_WqwmxjP1R0

3) ஷெனாய் இசைக்கருவியின் இசை பாடல்:- 
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
திரைப்படம்: பாலும் பழமும் (1961), பாடியவர்:டி.எம்.எஸ்- பி.சுஷீலா,  இசை :எம்.எஸ்.விஸ்வநாதன், வரிகள்: கவிஞர் கண்ணதாசன்.  https://youtu.be/AtrOLDpmaT8


4) ஷெனாய் இசைக்கருவியின் இசை பாடல்:- பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது - எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கள குங்குமம் சிரிக்கின்றது. பாடல் இடம்பெற்ற படம்:- நினைத்ததை முடிப்பவன் (1975), பாடலை இயற்றியவர் கவிஞ்சர் கண்ணதாசன், இசை எம் எஸ் வி அவர்கள், பாடலைப்  பாடியவர்  டி.எம். எஸ்  அவர்கள்,  https://youtu.be/csBahBsXvaA


4) ஷெனாய் இசைக்கருவியின் இசை பாடல்:- உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் (உன் பேர்...) திரைப்படம் : மின்சாரக் கண்ணா, இசை: தேவா, பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன். பாடலை இயற்றியவர்  நா.முத்துகுமார்.  https://youtu.be/PxSiOkrTSdM


5) ஷெனாய் இசைக்கருவியின் இசை பாடல்:- இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா,  அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா.. திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,   இசை: டி.இமான், பாடல் வரிகள்: யுகபாரதி, பாடியவர்:-ஜெயமூர்த்தி.  https://youtu.be/33-EhS2zclI


....மீண்டும் அடுத்த நிகழ்ச்சிப் பதிவில் சந்திப்போமா? நன்றி வணக்கம்.... கோகி-ரேடியோ மார்கோனி.


Tuesday, March 7, 2017

கஞ்சிரா:- திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-21 / 108 (Episodu-21 of 108), :-

கஞ்சிரா:- திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-21 / 108 (Episodu-21 of 108), :-

நமது தமிழ் திரைப்படப் பாடல்களில் ஒரு பாடல் முழுவதும் "கஞ்சிரா" இசைக்கருவியை இசைக்கச் செய்து அனைவரும் விரும்பும் சிறந்த பாடலாக இயற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் அவர்கள். இந்தப் பாடலைப் பாடியவர்  பாடகி சித்ரா அவர்கள், " சாமி" படப்பாடலான.....

பாடல் :-இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?

நிகழ்ச்சிப்பதிவில் ஒரு கூடுதல் செய்தி:- 
ஒரு கை ஓசை சாத்தியமா? சாத்தியம்தான். விரல்கள் ஒத்துழைத்து நீங்கள் கஞ்சிரா வாசிப்பவராக இருந்தால். அரிய உயிரினமான உடும்பின் தோலால் செய்யப்படுவது கஞ்சிரா என்னும் வாத்தியம். 
ஸ்ருதி சேர்க்க முடியாத வாத்தியம். பேஸ், ஷார்ப் இரண்டு நிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய வாத்தியம்.

பிரபலமாக இல்லாத இந்த வாத்தியத்தை வாசிக்க ஆண்களே யோசிக்கும்போது பெண்கள் வாசிக்காததில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த வாத்தியத்தைத் தன்னுடைய விருப்ப வாத்தியமாகத் தேர்ந்தெடுத்து, கர்நாடக இசை மேடைகளில் பக்கவாத்தியம் வாசித்துவருபவர் கிருஷ்ணபிரியா. அதிலும் இடக் கையால் இவர் வாசிப்பது இன்னும் விசேஷம்.

மறைந்த கிளாரினெட் மேதை கிருஷ்ண பகவான், இவரின் பாட்டனார். இவருடைய தந்தை ரமேஷ்பாபு வயலின் வித்வான். இவருடைய அக்கா விஜயவாஹினியும் இளைய சகோதரர் திலீப் கிருஷ்ணாவும் கீ போர்ட் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள்.

புகழ்பெற்ற கஞ்சிரா வித்வான் மாயவரம் சோமசுந்தரத்திடம் கஞ்சிரா வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஆறு ஆண்டு பயிற்சிக்குப் பின், தமிழ்நாடு இசைக் கல்லூரியில் சேர்ந்து, கஞ்சிரா வாத்தியக் கலைமணி என்னும் பட்டயத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது திருவல்லிக்கேணி சேகரிடம் பயிற்சியைத் தொடர்ந்துவருகிறார்.

கர்நாடக இசை மேடைகளில் வீணை வித்வாம்சினி பானுமதி, மாண்டலின் கலைஞர் அரவிந்த் பார்கவ், காஷ்யப் மகேஷ், சைந்தவி, சாருலதா, ஸ்மிதா ஆகியோருடன் இணைந்து கஞ்சிரா வாசித்திருக்கிறார். பெண் தபேலாக் கலைஞரான அனுராதா பால் அவர்களுடன் இணைந்து ஜூகல்பந்தியும் வாசித்திருக்கிறார்.

சென்னையின் முக்கிய சபாக்களிலும், திருவையாறு, செம்பை விழாக்களிலும், மும்பையின் பிரபல சபாக்களிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல், முன்னணி தொலைக்காட்சிகளிலும் பிரபல நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆடியோ ஆல்பங்களிலும் இவருடைய கஞ்சிரா ஒலித்திருக்கிறது. நன்றி தி இந்து நாளிதழ் திரு ரவிக்குமார் அவர்களின் தொகுப்பு கட்டுரையிலிருந்து.

"கஞ்சிரா":-திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- பகுதி-21 / 108 (Episodu-21 of 108) என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்"(https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம். மறந்துவிடாதீர்கள் 21வது பதிவாக "கஞ்சிரா": இசைக்கருவியை வாசித்து உருவான திரைப்படப் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன்.   நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   

Saturday, March 4, 2017

"உறுமிமேளம்" திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-02 / 108 (Episodu-02 of 108) :-

"உறுமிமேளம்" திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-02 / 108 (Episodu-02 of 108) :-  

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:-  பகுதி-02 / 108 (Episodu-02 of 108) என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்" (https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம்.  வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன்.   நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   
நமது திருவிழா கோவில் விஷேசங்கள் என்றுமே நம்முடைய பாரம்பரிய நடனங்களும் வாத்தியங்களும் இல்லாமல் ஆரம்பிக்கப்படுவதும் இல்லை; பாரம்பரிய இசைக்கருவிகள் இல்லாமல் நிகழ்ச்சி களைகட்டுவதும் இல்லை. திருவிழா என்றாலே இளையோர் முதல் பெரியோர் வரை குடும்பமாகக் கலந்துக் கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் கருத்துப் பரிமாற்றத்தை நடத்துவதும்தான் வழக்கம். நம் அடையாளத்தை அடுத்த தலைமுறையினருக்கு திரையிட்டுக் காட்டி நம் வாழ்க்கைச் சக்கரத்திற்கு இந்த பாரம்பரிய பிடிமானம்தான் அச்சானி என்பதையும் உணர்த்தும் வேளையில்,  இந்த திருவிழா வைபங்கள்தான் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது.
நம்முடைய நாட்டுப்புற கலைகளில் முக்கிய வாத்தியம் இந்த "உறுமி மேளம்". விலங்குகள் உறுமுவதைப் போன்று ஒலியை எழுப்பக் கூடிய இசைக்கருவி என்பதால் உறுமி என்று பெயர் வந்திருக்கலாம். இது இருமுகங்களைக் கொண்ட தோல் இசைக்கருவி ஆகும். இக்கலையின் ஜனனம் என்னவோ தமிழகமாக இருந்தாலும் இதன் பயணம் என்பது மலேசிய இளைஞர்களின் ஈடுபாட்டில் வெகுதூரத்திற்கு நீடிக்கின்றது, காவல் தெய்வங்களை வணங்குவதில் முக்கிய இடம் வகிக்கும் இந்த உறுமிமேளம் மலேசிய வைபவங்கள் அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் இசைக் கருவி. தமிழகத்திலும் பெரும்பாலான கோயில்களில் உறுமி மேளக் குழு இருப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலான அம்மன் பாடல்களில் உறுமிமேளம் பயன்படுத்தப்படுகிறது, தமிழ்த் தெய்வம் முருகப்பெருமானின் கோவில் திருவிழா, முருகன் பாடல்கள், ஐயப்ப பாடல்கள் என பல்வேரு ஆன்மீக பாரம்பரிய நிகழ்ச்சியில் உறுமிமேளம் வாசிக்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் பகுதி நேரமாக இக்கலையையை நடத்தி வந்தாலும் அனைத்து திருவிழாக்களின் உயிரோட்டம் இந்த உறுமிமேளம் என்று சொன்னால் அது மிகையாகாது. 
உறுமிமேளம் மிக அதிக சப்தத்தைக் கொண்ட இசைக்கருவி என்பதால் வெளிநாடுகளில் இந்த இசையை இசைப்பதற்கு தடைவித்தித்து குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இசைக்கலாம் என  சில விதிமுறைகளையும் வகுத்திருக்கிறார்கள்.  
திரையிசையில் உறுமிமேள  இசைக்கருவியின் இசையால் பல திரைப்படப்பாடல்கள் பலரது மனங்களிலும், அன்றும், இன்றும், என்றும் அழியாத இடம்பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.இன்றய இந்த நிகழ்சியில் / பதிவில், திரைப்படப் பாடல்களில் உறுமிமேளத்தின் பங்கு பற்றி தெரிந்துகொள்ளலாம். 

பழைய திரைப்படப்பாடல்கள் வரிசையில்:-
உறுமிமேளம் என்று சொன்னாலே உடனே இந்த திரைப்படப்பாடல் நமது நினைவில் வந்துபோகும் .. உறுமி மேளத்தின் உறுமுகின்ற குரலாக TMS அவர்களின் குரலும்,  அந்த சிம்மக்குரலுக்கு இணையான நடிப்பில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருப்பதும் மிகவும் அருமை. அந்தக் காலத்தில் பெரிய ஹிட் பாடலாகக் கருதப்பட்ட பாடல் இது. 
1). பாடல்:- கேட்டுக்கோடி உறுமிமேளம் 
போட்டுக்கோடி கோபதாபம் 
பார்த்துக்கோடி உன் மாமன்கிட்ட 
பட்டிக்காட்டு ராகம் பாவம்
https://youtu.be/ev5G35lzX3M
படம்:- பட்டிக்காடா பட்டணமா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திரு.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடல் வரிகள் : கண்ணதாசன். 

அனைத்து அம்மன் பாடல்களிலும் உடுக்கை மற்றும் உறுமி மேளத்தின் பங்கு நிச்சயம் இருக்கும் என்று எளிமையாக சொல்லிவிடலாம் .. 
2) பாடல்:- அம்பிகையே ஈஸ்வரியே 
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட 
குங்குமக்காரி
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி ..
பாடியவர்: TM சௌந்தரராஜன், கண்ணதாசன் வரிகள்.இசை எம் எஸ் விஸ்வநாதன் https://youtu.be/LPc8fMN4094

"உறுமிமேளம்,  உறுமி கேட்கும்.... மாடு தலையாட்டும் என்பார்கள்",  "பட்டணத்தில் பூம் பூம் மாடு; கிராமத்தில் பெருமாள் மாடு என்பார்கள்",. பூம்  பூம் பூம் மாட்டுக்காரர் தனது மாட்டை பலவண்ண துணிகளால் அலங்கரித்து அந்த மாட்டுக்கொம்பிற்கும் வண்ணம்பூசி, உறுமிமேளத்தின் ஓசைக்கேற்ப பூம் பூம் மாட்டை தலை ஆட்டச் செய்வார். தற்போதைய நகரத்தில் வசிக்கும் புதிய தலைமுறையினருக்கு கிராமத்து வேடிக்கைகள் எல்லாம் திரைப்படப்பாடல்களில் மட்டுமே கண்டு கேட்டு ரசிக்க முடியும்.
  

3) பாடல்:-  பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும்டும்டும் மேளம் தட்டி சேதி சொன்னாண்டி, அரிசிபோட வெளியில்வந்த பொண்ண பார்த்தாண்டி அடுத்த மாசம் கண்ணாலத்துக்குத் தேதி சொன்னாண்டி...டும்டும்டும் ....டும்டும்டும். 3) படம் : அதே கண்கள்(1967) குரல் :P.சுசீலா குழுவினர், பாடல் : கண்ணதாசன், திரு.வேதாவின் இசையில் உருவாகி சக்கைப்போடு போட்டது இப்படத்தில். ஏ.சி.திருலோகச்சந்தரின் இயக்கத்தில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. https://youtu.be/YEHvmgoYrOo 

இடைக்கால திரைப்படப் பாடல்களின் வரிசையில்:-
@ கிராமப்புற கலைகளில் "கரகாட்டம்" மிக முக்கிய பங்கை வகிக்கிறது அப்படிப்பட்ட கரகாட்டத்தில் "உறுமிமேளம்" மிக மிக  முக்கியப்பங்கு வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதோ இந்தப்பாடலில் இளையராஜா அவர்கள் இனிவரும் புதிய தலைமுறையினரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் மிக அருமையாக கிராமியக்கலைக்கு உயிரூட்டியிருக்கிறார்.  

4) பாடல்:- மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு,  படம் : கரகாட்டக்காரன் (1990), இசை : இளையராஜா, பாடியவர் : பாலசுப்ரமணியம், வரிகள் : கங்கை அமரன். https://youtu.be/Ns9N03f_DdM

5) பாடல்: அம்மன் கோவில் கும்பம் இங்கே ஆடிவரும் நேரமடி .. திரைப்படம் :- அரண்மனைக்கிளி1993, இசை இளையராஜா, பாடல் முத்துலிங்கம், பாடியவர் சொர்ணலதா, மின்மினி https://youtu.be/-LRLXF2j1ps

6) பாடல்: மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
திரைப்படம்: கரகாட்டக் காரன்(1990), பாடியவர்: மலேசியா வாசுதேவன், சித்ரா, இயற்றியவர்: கங்கை அமரன், இசை: இளையராஜா. https://youtu.be/HfOSajWi6Bc

7) பாடல்:- பல்லாக்கு குதிரையில்  படம்:-பெரிய  வீட்டு பண்ணைக்காரன், பாடியவர் மலேஷியா வாசுதேவன் இசை இளையராஜா  https://youtu.be/CNkmu89TpzI

இதைப்போல  இளையராஜா அவர்களின் இசையில் மேலும் பல பாடல்களில் உறுமிமேளத்தின் இசையையும் இணைத்து மெருகேற்றியிருக்கிறார்.  

தற்கால புதிய பாடல்களின் வரிசையில்:- 
8) பாடல்:-  தூள் படத்தில் ‘மதுரை வீரன் தானே’ பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் சிறந்த பெயரைப்பெற்ற  நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா அவர்ளின் பாடல் “ஏய் சிங்கம்போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி…” இந்தப்பாடலில் இசையமைப்பாளர் வித்தியாசாகர் அவர்கள்  "உறுமிமேளம்" இசையை மிகவும் இனிமையாக பாடலை கிராமிய மனம் கமழ இசையமைத்திருப்பார் https://youtu.be/2r7NdhBFzpo

9) பாடல் ஆளுமா டோலுமா,   வேதாளம் படத்தின் “ஆளுமா டோலுமா" என்ற ப்ரோமோ பாடல் அனிருத்தின அதிரடி இசையில் பாடலில் உறுமிமேள இசையும் சேர்த்து இசைக்கப்பட்டது. https://youtu.be/Rw2gP-L60N0
  
10) பாடல்:- அடி குத்துல குத்துறா என்கிற இளையராஜா இசையமைத்த தாரை தப்பட்டை பட பாடலில் உறுமிமேள இசையும் சேர்ந்து பயணிக்கிறது ...https://youtu.be/p-ld6emmmPw

மேலும் பல புதுப்பட குத்துப் பாடல்களில் "உறுமிமேள" இசையும் சேர்ந்து இசைக்கப்பட்டிருக்கிறது.  

இந்தத்தொடரின் அடுத்த பகுதியில் நாம் ரசிக்க இருப்பது "மவுத்தார்கன்- (MouthOrgon)" என்று அழைக்கும் வாய் உதடுகளின் நடுவில் வைத்து ஊதும் துளை இசைக்கருவி  பற்றிய சிறப்பு பகுதியையும்..., 

திரையிசையில் மவுத்தார்கன் வாத்தியக்கருவியின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவில் பங்குகொண்டு மகிழலாம். 

அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறும் உங்கள் நண்பன் கோகி-ரேடியோ மார்கோனி.

இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர் காலம் பகைவர்களே ஓடுங்கள் புலிகளிரண்டு வருகின்றன...
https://youtu.be/7LyOJWJgSzI

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை 
https://youtu.be/qjnorxdJ2J8
....மீண்டும் அடுத்த நிகழ்ச்சிப் பதிவில் சந்திப்போமா? நன்றி வணக்கம்.... கோகி-ரேடியோ மார்கோனி.

Saturday, February 25, 2017

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- பகுதி-01 / 108 (Episodu-01 of 108)

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:-  பகுதி-01 / 108 (Episodu-01 of 108) என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்" (https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம்.  வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன்.   நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:-  நாதஸ்வரம்,  பகுதி-01 / 108 (Episodu-01 of 108):- 
பண்டைத் தமிழர்கள்,  இசைக்கருவிகளை, 1)தோல் கருவி, 2)நரம்புக்கருவி,  3)துளைக்கருவி,  4)கஞ்சக்கருவி என்று நான்கு வகைகளில் பிரித்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.  காலப் போக்கில் சில இசைக்கருவிகளும், இசைக்கலைஞ்சர்களும், இசைக் கலைகளும் வழக்கொழிந்து போவதற்கான சாத்தியங்களைத் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. அதேநேரத்தில், அப்படிப்பட்ட பண்டையகால இசைக்கருவிகளையும், நாட்டுப்புறக் கலைஞர்களும் தற்கால சூழலுக்கேற்ப தங்களது அற்புதக் கலைகளை உலகம் ரசிப்பதற்கு ஏதுவாக, தொழில்நுட்பப் புரட்சியில் பங்கேற்க, சினிமா, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை உரிய முறையில் பயன்படுத்தி பண்டைய இசைக்கருவிகளின் மேன்மையை உணர்ந்து, அக்கலைகளை ரசித்துணரும் தன்மையை, இனிவரும் தலைமுறையினர் பயனடையும் பட்சத்தில், பண்டைய இசைக்கருவிகளுக்கும், இசைக்கலைகளுக்கும் என்றும் அழிவில்லை!

பல்வேறுவிதமான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, பல இசைப்பிரியர்களின் மனங்களை விட்டு அகலாமல், அவர்களின் மனங்களில் ஆழமாக பதிந்துவிட்ட பாடல்களுக்கு சிறப்பு சேர்த்த இசைக்கருவிகள் பற்றிய நிகழ்ச்சி தொகுப்புப்பாக உருவானதுதான் இந்த திரைப்படப் பாடல்களில் இசைக்கருவிகளின் பங்கு என்கிற தொடர். இந்த இசைக்கருவிகளின் இசைத்தொகுப்புத் தொடரில், முதலில் நாதஸ்வரம், தவில் என்று தொடங்கி, மேள-தாளம், கடம், கஞ்சிரா, மிருதங்கம்,   தபேலா அல்லது தப்லா- தமிழில் இருமுக முழவு, தாரை தப்பட்டை, பறை, முரசு கொட்டல், வாடிப்பட்டி மேளம், உறுமி மேளம், ஜால்ரா, மோர்சிங் (யூத யாழ்), உடுக்கை, கிளுகிளுப்பை, டோலக்கு, சலங்கை, சல் சல் -டோலா,  மணி, மவுத்தார்கன், ஜலதரங்கம், தம்புரா, பியானோ, வயலின்-யாழ், புல்லாங்குழல், ஆர்மோனியம், புல் புல் தாரா- புல்புல் தாராங்,வயலின், வீணை, கிடார், சித்தார், ஷனாய்இசை,  சாக்ஸ்போன் இசை, ட்ரம் செட், மாண்டலின், மகுடி, உடுக்கை,  மேற்கத்திய சந்தூர் யாழிசை, மேற்கத்திய குழலிசை போன்ற மேலும் பல இசைக்கருவிகளின் இசையை தனித்தனியாக பிரித்து ரசித்து உணரக்கூடிய வகையில் அவைகளின் சிறப்புக்களைக் கொண்ட இசைப் பாடல்களை வரிசைப்படுத்தும் தொடர் இது.      

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:-  நாதஸ்வரம்,  பகுதி-01 / 108 (Episodu-01 of 108) 
நாதஸ்வரம் :-  நாதசுவரம் என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவது உண்டு.  இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால் அனைத்துவிதமான மங்கள சுப  நிகழ்ச்சிகளுக்கும் இந்த இசை இசைக்கப்படுவது வழக்கம்.  இந்த இசைக்கருவியின் இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது. பண்டைய கால வரலாற்றில் 17ம் நூற்றாண்டில்தான் இசைக்கருவிகளின் "நாதஸ்வரம்" பற்றிய குறிப்புகள் நமக்கு கிடைத்துள்ளது. இவ்வகை இசைக்கருவி "ஆச்சா"  என்கிற மரக்கட்டையில் செய்யப்படுகிறது. இந்த இசைக்கருவியின்  குறுகிய மேற்பகுதியில் "கொறுக்கைத் தட்டை" என்கிற "நாணல் புல்" ஒன்றை சுருட்டி, ஊதும் வகையில் பொருத்தப்படுகிறது இதைத் தான் "ஜீவ வளி-அழுத்த காற்று ஊதுதல்" என்பது மருவி "சீவாளி" என்ற பீப் பீ- ஊதல் பொருத்தப்பட்டு "நாதஸ்வர" இசைக்கருவியாக முழுமைப்பெறுகிறது. 

சாஸ்திரிய சங்கீத சாம்ராஜ்யத்தில் பிரபல நாதசுவரக் இசைக் கலைஞர்கள் வரிசையில்:- திரு. டி. என். ராஜரத்தினம் பிள்ளை, திரு நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், திரு.நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல், சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, திருவாரூர் சாமிநாதப் பிள்ளை, திரு வி. கே. கானமூர்த்தி போன்ற மேலும் பலர் பிரபலமான சாஸ்திரிய சங்கீத வாத்திய வித்துவான்களாகத் திகழ்ந்தனர். 
திரையிசையில் நாதஸ்வர இசைக்கருவியின் இசையால் பல திரைப்படப்பாடல்கள் பலரது மனங்களிலும், அன்றும், இன்றும், என்றும் அழியாத இடம்பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

நாதஸ்வரம்:-
பழைய திரைப்படப்பாடல்கள் வரிசையில்:-
1). பாடல்:- சிங்கார வேலனே தேவா....."  படம்: கொஞ்சும் சலங்கை, நடிகர்: திரூ.ஜெமினி கனேசன், சாவித்திரி, பாடியவர்: இசைக்குயில் எஸ்.ஜானகி, இசை: திரு. எஸ்.வி.சுப்பையா நாயுடு, நாதஸ்வரம்: திரு,காரைக்குறிச்சி அருனாசலம். https://youtu.be/AX0o-_EXA1I

2). பாடல்:- நலந்தானா…. நலந்தானா… உடலும் உள்ளமும் நலந்தானா ...." படம் - தில்லானா மோனாம்பாள், பாடியவர் - பி.சுசீலா இசை - கே.வி.மகாதேவன், நடிகர்: திரூ.சிவாஜி கணேசன் மற்றும்  பதமினி அவர்களுடன்... https://youtu.be/YoJBZYCZThg

3). பாடல்:- மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழவைப்பான் என்று…. ."  திரைப்பட: பாசமலர்,  பாடியவர்- தி எம் சௌந்தரராஜன், இயற்றியவர்-கவிஞ்ர் கண்ணதாசன், இசை எம் எஸ் விஸ்வநாதன், நடித்திருப்பவர், திரு.சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் ஜெமினிகணேசன் அவர்கள் https://youtu.be/9P8Hynotz1M

இடைக்கால திரைப்படப் பாடல்களின் வரிசையில்:-
4). பாடல்:- அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே…. ."  திரைப்பட: கோவில் புரா (1981) || மொழி: தமிழ் || இசை: இளையராஜா || பாடியவர்கள்: பிசுசீலா, உமா ரமணன், வலம்புரி சாமிநாதன். நடித்திருப்பவர், திரு.ராஜபகதூர், சரிதா, ஜெய்ஷ்ங்கர், ஹரிணிக்குமார், விஷ்ணுச்சக்ரவர்தி போன்றவர்கள்...  https://youtu.be/zX97xtTwtGY

5. பாடல்:- தலையைக் குனியும் தாமரையே,  படம் :-  ஒரு ஓடை நதியாகிறது ( Oru Oodia Nathiyaagirathu ),பாடியவர்:- திரு.S.P.பாலசுப்ரமணியம், ராஜேஷ்வரி அல்லது B.S.சசி ரேகா, இசை:- இசைஞானி இளையராஜா, இயக்குநர் : ஸ்ரீதர், நடிகர்கள்  : ரகுவரன், சுமலதா  https://youtu.be/a85uJh-1Ie4

தற்கால புதிய பாடல்களின் வரிசையில்:- 
6. பாடல் ரகசியமாய் ரகசியமாய்,  படம் : டும் டும் டும்  இசை : கார்த்திக் ராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார்,  பாடியவர்கள் : சதனா ஷர்கம் மற்றும் ஹரிஹரன் அவர்கள், நடிப்பு:- மாதவன், ஜோதிகா https://youtu.be/crw0T0gKL-k

7). பாடல் "காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்",  திரைப்படம் : கோச்சடையான், இசை : ஏ.ஆர்.ரஹ்மான், வரிகள்: வைரமுத்து, குரல்: லதா ரஜினிகாந்த்.  ஆஹா என்ன ஒரு மென்மையான பாடல்… காதல் கணவனை நோக்கி பாடும் குரலில் : லதா ரஜினிகாந்த். உருகி உருகி மனைவி பாடும் / கொடுக்கும் சத்தியங்கள். நடு நடுவில் வரும் நாதஸ்வரம் நல்ல தேர்வு. இதுவரைக் கேட்டதில், இந்த ஆல்பத்தின் பெஸ்ட் பாடல் இது தான். ...https://youtu.be/R5Wa9J3Whis


இந்தத்தொடரின் அடுத்த பகுதியில் நாம் ரசிக்க இருப்பது "உறுமி மேளம்"
"உறுமி மேளம்" என்ற வாத்தியக் கருவி பற்றிய சிறப்பு பகுதியையும், திரையிசையில் உறுமி மேளத்தின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவில் பங்குகொண்டு மகிழலாம். அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறும் உங்கள் நண்பன் கோகி-ரேடியோ மார்கோனி.
....மீண்டும் அடுத்த நிகழ்ச்சிப் பதிவில் சந்திப்போமா? நன்றி வணக்கம்....    

Thursday, February 16, 2017

Life: THE BEST COMPANION

Life: THE BEST COMPANION: Hi friends, When my children were kids, I used to visit my close relatives so that they could get good exposure. One of my relatives was ...

Monday, February 13, 2017

ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். ...

ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். ...

வானொலியில் நான் எழுதி வழங்கிய நிகழ்ச்சித் தொகுப்பை, புத்தகமாக........ பகுதி-100(Episode-100)- இன்றய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? 

....."மேலாளர்" பதவிக்காக நேர்காணல் தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் "TOILET-கழிவறை நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா" என்றார்.

இப்போது இந்த விளையாட்டின் பந்து உங்களிடம் உள்ளது. நேர்காணலுக்கு வந்திருப்பவர் நீங்கலாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.

# பொதுவாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் சொல்வதைக்கூட சுத்தகரிப்பு தொழிலாளி சரியாக செய்யமாட்டார். நீங்களோ இன்னமும் அந்த நிறுவனத்தில் சேரவில்லை ஆகவே உங்களுக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உதவமாட்டார்கள்.

# நீங்களாகவே கழிவறையை பெருக்கி சுத்தம் செய்தால் நீங்கள் அந்த பணிக்குத்தான் லாயக்கு என்று முத்திரை குத்தப்படலாம்.

# மேலாளர் பதவிக்கு வந்த என்னைப்பார்த்தா இப்படி சொன்னாய் என்று கோபித்துக்கொண்டு "சரிதான் போடா சொட்டத்தலையா" என்று திட்டிவிட்டு வந்துவிட்டாலும் நீங்கள் மேலாளர் பதவிக்கு லாயக்கு இல்லாதவர் என முத்திரை குத்தப்படும்.

# அப்படியென்றால்  இந்த கேள்விக்கான பதில் என்ன???? ஒரு .நிறுவனத்தின் மேலாளர் என்பவர் விரல் நுனியில் விவரங்களை (fingers edge information) வைத்திருக்க வேண்டமா?

ஒரு நிறுவனத்திற்கு தேவையான அனைத்துவித சேவைகளையும் பெறுவதற்கு தேவைப்படும் சேவை நிறுவன தொலைபேசி எண்கள், நபர், முகவரி, போன்ற அனைத்து தகவல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களே...  விரல்  நுனியில்  விவரங்கள் வைத்திருப்பவர் என்பவர்"

இப்போது நீங்கள் உங்களின் " விரல் நுனியில் உள்ள விவரங்களை" பயன்படுத்தி கழிவறை சுத்தகரிக்கும் நிறுவனத்தை அழைத்து சுத்தம் செய்யச்சொல்லி, பிறகு சுத்தமான கழிப்பிடத்தை அந்த நிறுவன உரிமையாளரிடம் காண்பித்து "சபாஷ் மிக அருமையாக செய்திருக்கிறாய்" என்று கூறும்போது.... கழிவறை சுத்தகரித்த நிறுவனத்தின் செலவு சீட்டை தந்து அதற்க்கான தொகையை செலுத்துமாறு கூறவேண்டும்.

பாடல்:-...."வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைகாரன் வெவகாரமான வேலைக்காரன்.. http://youtu.be/HlYJd-bLiPk "

அடுத்த நேர்காணல் விளையாட்டை நாளை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...

மேலும் இப்படிப்பட்ட பல அனுபவங்களை கீழ் காணும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் வாங்கி படித்துப்பாருங்கள்.  இதை நான் புத்தக வியாபாரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவங்கள் சிறந்த வழிவகைகளை கற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன். 

எனது அனுபவங்கள் உங்களுக்கு பயனுள்ளவகையில் அமைந்து, அந்தப்புத்தகம் சிறந்த பெயரையும் புகழையும் பெறுமேயானால் .... எனது முதுமைக்காலங்களில் எனது பெயரே எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும். அதாவது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது அனுபவக் கல்வி பயன்படும் என்கிற நோக்கில், அந்தக் கல்வி நிறுவனங்கள் என்னை அழைக்கும்போதெல்லாம் என் பெயர்தான் எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும் என்பது உங்களுக்கு புரிகிறதா?... 
வாய்ப்பிற்கு நன்றி ....
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்...
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் !
வணக்கம்... நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
Contact:- GK India-New Delhi-+91-9717236514, E_mail:-GOPALKRISHNAN64@GMAIL.COM

Saturday, February 11, 2017

சாபம் நீக்கியோன் சன்னிதிக்கு வாராய்!

சாபம் நீக்கியோன் சன்னிதிக்கு வாராய்!

"வெறும் சேவை செய்தாலே போதும்- சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும்" என்பது உங்களுக்குத் தெரியுமா? பல வரலாற்று உண்மைச் சம்பவங்களோடு அவற்றைத் தெரிந்துகொள்ள, தொடர்ந்து இந்தப்பதிவை படித்துப்பாருங்கள்.......


மனித பிறவி எடுத்த ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சில தோஷ்ங்கள் காணப்படுகின்றன. முற்ப்பிறவியில் செய்த தவறுகளால், பாவச்செயல்களினால் ஏற்பட்ட வினைதான் இப்படி தோஷங்களாக அமைந்துவிடுகிறது. அவற்றில் முதன்மையான தோஷம் ராகு-கேதுவினால் வரும் தோஷங்களாகும். அதாவது நிழலாக நமது ஆத்மாக்களின் பிறவிகளோடு தொடரும் தோஷங்கள். அப்படி நிழல் கிரகமான ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷ பரிகாரமாக பலவற்றையும் செய்வதைவிட மிகச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது... அது எப்படி என்பதை சில உண்மைச்சம்பவங்கள் மற்றும் சில வரலாற்று நிகழ்விலிருந்து விளக்கமாகக் கூறுகிறேன் கேளுங்கள்....

கர்ம வினைகளினால் ஏற்படும், பிதூர்தோஷம், களத்திர தோஷம், சர்ப்பதோஷம், புத்திர தோஷம் போன்ற முக்கிய தோஷங்களுக்கு நிழல் கிரகங்களான ராகு,கேதுக்களே காரணமாகின்றனர். ஏனென்றால் அவை நிழலாக நம்மைவிட்டு விலகாமல் நாம் செய்த கர்ம வினைகளினால் நம்மை துரத்துகின்றன. அப்படிப்பட்ட இருட்டு-நிழல் நம்மீது படர்வதினால், நமது உடலின் உருவம் மற்றவர்களை கவர்ந்திழுக்காமல் மங்களாகி விடுவதோடு, நமது எண்ணங்களும் இருட்டடிக்கப்படுகிறது. நமக்கு முன்னாள் எதோ ஒரு திரை நமது கண்களை மறைக்கும்போது அந்தத் திரையை விலக்காமல் நம்மால் எதையும் செய்யமுடிவதில்லை.  

ஜோதிடர்களின் கூற்றுப்படி, சர்ப தோஷம் என்பது என்னவென்றால் ஒருவரது ஜனன ஜாதக லக்னத்தில் ராகு, மற்றும் 7ஆம் இடத்தில் கேது. இல்லையென்றால், லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு. அல்லது 2இல் ராகு, 8இல் கேது அல்லது 8இல் ராகு, 2இல் கேது. அதாவது லக்னம், மற்றும் லக்கினத்திலிருந்து 1ஆம் இடம் 7ஆம் இடம், 2ஆம் இடம் 8ஆம் இடம் இதில் ராகுவோ கேதுவோ இருந்தால் அதற்குப் பெயர் சர்ப தோஷம்.

சர்பதோஷத்தினால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும். இதனால் சர்ப தோஷம் உள்ள ஒரு ஜாதகரோடு, மற்றொரு சர்ப தோஷம் கொண்ட ஜாதகரையும் சேர்க்கும் போது சில தோஷங்கள் நிவர்த்தியாகிறது. அதனால்தான், தோஷத்திற்கு தோஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம். 

மருத்துவத்துறை சிறப்பாக நடக்க மருத்துவ கிரகமான கேதுவின் அருள் வேண்டும். அவரது அருள்கடாட்சம் இல்லாமல் மருத்துவத்துறையில் முன்னேற முடியாது. மேலும் திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ராகு-கேது எல்லோருக்கும் கெடுதலை செய்துவிடுவதில்லை ஒரு சிலருக்கு அபரிதமான நன்மைகளையும் கொடுப்பார்கள். ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், அடிக்கடி பாம்பை பார்க்கநேரிட்டாலும், ராகு /கேது தோஷ பரிகாரம் செய்வது நல்லது. 
பரிகாரம்; 
@  திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் செய்யலாம்.மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிவன் உள்ளிட்ட (பாம்பு தொடர்பான) கோயில்களிலுக்கு சென்று வழிபாடும் மேற்கொள்ளலாம். நவகிரகத்தில் உள்ள ராகு/கேதுவுக்கும் விளக்கேற்றலாம்.   

(திருக்காளஹஸ்தி சென்றால் பாதாள விநாயகரையும், திருகாளத்தீஸ்வரரை தரிசிக்கும்போது   சிவலிங்கத்தோடு  இருக்கும் நாகதேவரையும், சிலந்தி மற்றும் யானை மற்றும் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் தங்கப் பல்லி ஆகையவைகளை அதற்குரிய  இத் தளத்தின் வரலாற்று முறைப்படி தரிசிக்கவேண்டும் என்பதை கவனத்தில் வையுங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில், உங்களைப்பிடித்த தோஷங்களை போக்கும் என்பதை நினைவில் வையுங்கள். எப்படிப்பட்ட புராதான திருக்கோவில்களாக இருந்தாலும், அந்தக் கோவிலின் / திருத்தலத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்த திருத்தலத்தின் வரையறுக்கப்பட்ட முறைப்படி தரிசனம் செய்தால் மட்டுமே முழுப்பலனையும் பெறமுடியும். ஆகவே கோவில் அலுவலகத்தை தொடர்புகொண்டு அல்லது அந்த திருக்கோவில் அர்ச்சகரை உரிய தட்சிணைகளை தந்து, முழுவிவரங்களையும் தெரிந்துகொண்டு, உரிய முறையில் தரிசனம் செய்யவேண்டும். அப்போதுதான் சரியான தரிசன பலன் நமக்கு கிடைக்கும்)

@  ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது தோஷம் பெற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவலாம்.ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு உதவலாம். பழைய பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவலாம். பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொறுப்பேற்கலாம் இதுவும் சிறந்த பரிகாரமாகும்.
@ இன்னொரு சிறந்த பரிகாரமாக ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தாய்வழி பாட்டன், பாட்டி-தகப்பன் வழி பட்டன், பாட்டி இவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்விப்பது சிறந்த பரிகாரமாகும். காரணம் ஜோதிட ரீதியாக ராகு,கேதுற்கு இவர்களே அதிபதி ஆவார்கள்.

@ நிழல் கிரகமான ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷ பரிகாரமாக பலவற்றையும் செய்வதைவிட மிகச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது......அதாவது " ஆலயம் செல்லும் பக்தராக குறைந்தது ஒருநாளாவது   "புட்டபர்த்தியில்" கால்கள் அந்த புண்ணிய பூமியில் படுமாறு அங்கு தங்கி சேவை செய்யவேண்டும். (சபிக்கப்பட்ட இடம் எப்படி புண்ணியபூமியானது என்பதற்கு ஒரு புராண சம்பவம் ஒன்று உண்டு) அப்படி சேவை செய்வதால் ராகு கேதுவின் தோஷங்கள் உங்களைவிட்டு விலகுவதை உங்களால் அனுபவப்பூர்வமாக உணரமுடியும்.  அது எப்படி என்பதை ஒரு வரலாற்று நிகழ்விலிருந்து விளக்கமாகக் கூறுகிறேன் கேளுங்கள்....

(இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் சித்திராவதி நதிக்கரையருகே அமைந்த ஒரு நகரம் "புட்டபர்த்தி" என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது. புட்டப்பருத்தியின் அசல் பெயர் "கொல்லபள்ளி"  என இருந்தது)

முன்னமோர் நாளினில் மூண்டசா பத்தினால் 
துன்னிய புற்று துயர்செய்த பர்த்தியைப்
பன்னகம் பூண்டவன் வாழ்கயி லாயமோ
மென்னகை நாரணன் மேவுவை குந்தமோ
என்னவே ஆக்கிய இன்முகன் சாயியின்
சன்னிதி தன்னைச் சடுதியில் சேர்ந்திட
உன்னை யழைத்தோம் உறங்குதல் ஆகுமோ
இன்னகை வாராய்! இசைந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-4)

பொருள்:-
பண்டைநாள் ஒன்றில் உண்டான சாபத்தால் புற்றுக்கள் மண்டிக் கிடந்து புட்டபர்த்தி மிகவும் துன்பமடைந்தது. அப்படிப்பட்ட இடத்தை, இது நாகங்களை அணிந்த சிவன் வாழும் கைலாசமோ, இனிய நகை பூண்ட நாராயணன் வசிக்கும் வைகுண்டமோ என்னும்படி ஆக்கிவிட்டான் சாயி! அவனுடைய சன்னிதிக்கு விரைவாகப் போய் அடையலாம் வா என்று நாங்கள் உன்னை அழைத்தோம். இனிய நகை பூத்தவளே! இசைந்து எங்களோடு வருவாயாக. (அருஞ்சொற்பொருள்: பன்னகம் - பாம்பு.)

இன்று புட்டபர்த்தி என்று அறியப்படுமிடம் பண்டைக்காலத்தில் கொல்லபள்ளி (பசுக்கூட்டம் நிறைந்த இடம்) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இங்கு முழுவதும் பசுக்களும் இடையர்களும் நிறைந்திருந்தனர்.

ஒருநாள் அந்தக் கிராமத்தின் இடையன் ஒருவன், காட்டில் பசுக்களை மேய்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான். அதில் ஒரே ஒரு பசுவின் மடியில் பால் இல்லை என்பதை கவனித்து ஆச்சரியம் அடைந்தான். இது தொடர்ந்து நடந்தது. ஒருநாள் அந்தப் பசுவைப் பின்தொடர்ந்து சென்று எப்படிப் பால் திருடுபோகிறது என்றறியத் தீர்மானித்தான். இதையறியாத பசு வழக்கம்போல ஒரு பாம்புப் புற்றின் அருகில் சென்றது. அதிலிருந்து ஒரு பாம்பு வெளிவந்து, பசுவின் பின்னங்கால்களைச் சுற்றிக்கொண்டு அதன் மடியிலிருந்த பாலைக் குடித்தது. பசுவுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை.

இடையனுக்குக் கோபம் கண்மண் தெரியாமல் பொத்துக்கொண்டு வந்தது. அந்தப் பாம்பு தெய்வீகமானதாக இருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றவில்லை. ஒரு பெரிய கல் ஒன்றை எடுத்துப் பாம்பின்மேல் எறிந்தான். ரத்தம் சிதறிக் கல்லைக் கறையாக்கியது. பாம்பும் இறந்துபோனது.

ஒரு பாம்பை அடித்தால் புற்றீசல் போல பல பாம்புகள் வெளிவரும் என்பது கூற்று. எனவே இந்தச் சம்பவத்துக்குப் பின் கொல்லபள்ளியில் இடையர் குடும்பங்களும், பசுக்களும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன. பார்க்குமிடமெல்லாம் பாம்புப் புற்றுகள் வளரத் தொடங்கின. அந்த இடையனால் கொல்லப்பட்ட பாம்பின் சாபமே கொல்லபள்ளி கிராமம் அழியக் காரணம் என்று மக்கள் நம்பினர். அந்த கிராமத்தின் பெயர் ‘புட்டவர்த்தினி’ (புற்றுக்கள் செழித்து வளரும் இடம்) என்றாயிற்று.

பாம்பின் ரத்தம் படித்த அந்தக் கல்லை எடுத்துச் சென்று அதற்கு ‘கோபாலஸ்வாமி’ என்று பெயரிட்டு அதைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். (கோபாலன் என்றால் பசுக்களைக் காப்பவன், அதாவது இடையன், என்றுதானே பொருள்). தமது குலத்தைச் சேர்ந்தவன் செய்த தவறை மன்னிக்கப் பிரார்த்தனை செய்தனர். மெல்லப் பெயர் மாறி ‘புட்டபர்த்தி’ என்று ஆனது.

அதே கிராமத்தில் ரத்னாகர வம்சத்தில் வந்த கொண்டமராஜு கிருஷ்ணனின் தேவியான சத்யபாமாவுக்கு ஒரு கோவில் ஏற்படுத்தினார். மிகுந்த பக்திமானான கொண்டமராஜுவின் பேரனாக அவதரித்த அவதாரப் புருஷனால் புட்டபர்த்தியின் சாபம் முழுவதுமாக நீங்கப்பெற்று, இன்று உலகம் போற்றும் தெய்வத் திருத்தலமாக விளங்குகிறது.

ஒருமுறை ஸ்ரீ சத்ய சாய் பகவான் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். பாதையில் ஒரு பாம்பு குறுக்கே ஓடியது. ஓட்டுனர் வண்டியை பிரேக் போடாமல் பாம்பின் மேல் வண்டியை ஏற்றிவிட்டான். புட்டப்பர்த்தி வந்ததும் பகவான் வாகனத்திலிருந்து இறங்கினார். நேரே தனது அறைக்குச் சென்றார். ஓட்டுனரை கூப்பிட்டு அனுப்பினார். ஓட்டுனர் வந்தவுடன் தனது மேலங்கியை கழற்றி ஓட்டுனருக்குக் காட்டினார். முதுகிலே டயரின் தடம் பதிந்திருந்தது. பகவான் "பார் அந்தப் பாம்பின் மேல் நீ காரை ஏற்றவில்லை என் முதுகின் மேல் ஏற்றிவிட்டாய்' என்றார். ஓட்டுனருக்கு வியர்த்தது. கையும் காலும் ஓடவில்லை. "இனிமேல் இம்மாதிரியாக நடந்து கொள்ளாதே' என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இன்னொரு முறை சித்திராவதி நதிக்கு அக்கரையிலிருந்து ஒரு குடும்பம் அவதார புருஷரான ஸ்ரீ சாயிபாபாவை பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் இரண்டு நாட்கள் புட்டபர்த்தியில் தங்கியிருந்து. பகவானிடம் விடை பெற்று, தங்கள் ஊருக்குப் புறப்பட ஆயத்தமானார்கள் அப்போது. பகவான் சத்யசாயிபாபா அவர்களை அழைத்து அவர்களிடம்  "நீங்கள் மாட்டு வண்டியில் தானே வந்தீர்கள்' என்று கேட்டார். ஆம் என்ற பதில் வருவதற்கு முன்பே சத்யா சாயி பகவான் தொடர்ந்து பேசினார்  "நீங்கள் மொத்தம நான்கு பெரியவர்களும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றீர்கள்'. சித்திராவதி நதிப்படுக்கை மணலாக இருக்கிறது. ஆற்றைக்  கடந்த பிறகு நீங்கள் வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள். அதற்கு முன் வண்டியில் ஏறினால் மாடு மிகவும் கஷ்டப்படும். மாட்டைக் கஷ்டப்படுத்தாதீர்கள்" என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். எங்கோ இருக்கின்ற மாட்டுக்காக அவதார புருஷரின் இதயம் எவ்வளவு கனிகிறது என்று பாருங்கள் என்று ஒரு பக்தர் கூறியதைக்  கேட்ட ஸ்ரீ சத்யா சாயி பகவான், அவரை அழைத்து 'இறைவனிடம் அடிபணியும் அனைத்து ஜீவராசிகளின் மனதை என்னால் புரிந்துகொள்ளமுடியும். வண்டியை இழுத்து வந்து மாடுகளின் கஷ்டத்தையும், வந்திருந்த அந்தக் குடும்பத்தினரின் குடும்ப தோஷ கஷ்டங்களும் தீர, அவர்களின் காலடி இந்தப் புட்டபர்த்தியில் படவேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட சாப விமோச்சனமாக இருந்ததால் அப்படி கூறி அனுப்பினேன்' என்கிறார்.   

நாம் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்,  சில சாஸ்திர சம்பிரதாயங்களால் நமக்கு நன்மை கிடைக்கும் என்றால் அவற்றின்மீது நம்பிக்கை வைப்பதால் தவறு ஏதும் இல்லையே? ஆகவே சாமி சொல்லோ அல்லது ஆசாமி சொல்லோ நமக்குத் தேவை, நாம் நமது கெட்ட கர்ம வினைகளிலிருந்து விடுதலை பெற்று சிறப்படையவேண்டும், எனவே தோஷ பரிகாரம் என்பதை செய்வதில் தவறு என்று ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நம்பிக்கையோடு  முயற்சி செய்து பாருங்கள், முடியாது என்று ஏதும் இல்லை. ஆகவே நம்பிக்கையோடு செய்யும் எல்லா செயலும் நமக்கு நல்லவைகளை தரும் என்று நம்புவோம்..... 
  
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.  

Monday, February 6, 2017

எந்த தேர்வாகிலும், தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண் எடுக்கவும்....

எந்த தேர்வாகிலும், தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் அவர் சொன்ன ‘6 R’-களை அதாவது Read, Remember, Reproduce, Refer, Rectify, Revise ஆகிய சூட்சுமங்களை அனைவரும் மிகுந்த கவனத்தோடு குறிப்பெடுத்துக்கொண்டனர்.....

ஒருமுறை படி, அதை ஒன்பதுமுறை திரும்பத் திரும்ப எழுதிப்பார், எழுதியதை உன் நினைவில் பதிந்ததா என்பதை சோதித்துப்பார், விடுபட்டுப்போன குறை நிறைகளைத் திருத்திக்கொண்டு... நீ படித்து தெரிந்துகொண்டதை முகம்பார்க்கும் கண்ணாடி முன்பு நின்று உனக்கு நீயே பாடம் நடத்தி ஒப்பிட்டுப்பார் ... இனி நீ எந்த தேர்வையும் எழுத சென்றுவா ... வென்றுவா ... அனைத்திலும் வெற்றிவாகை சூடிவா ....... (கோகி).


பாடலைக் கேட்டு உள்ளம் மகிழ்வோம், உவகையில் நிறைவோம்!!!!
"சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை - மகனே
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை- இந்த
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா ...."
    

FREE JOBS EARN FROM HOME