FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, February 13, 2018

சிவபூஜையில் கரடி

சிவபூஜையில் கரடி:-

தூக்கம் களைந்து விழிப்பு வந்ததும் காலைக்கடன்களை முடித்து சற்று வெளியில் வந்து பார்த்தபோது இன்னமும் கதிரவன் எழுந்திருக்கவில்லை. நேற்று பெய்த மழையில் இன்றய காலை நேரம் சில்லென்ற ஈரமான தரை, மிகவும் சில்லென்ற காற்று உடலுக்கு சிலிர்ப்பூட்டியது. வெகுதூரத்தில் சிவன்கோவிலின் பாடல்கள் காற்றில் ஒலித்துக்கொண்டிருந்தது.  இன்று இரவு சிவராத்திரி விஷேசம் என்பது ஞாபகம் வந்தத்த்து. 

வேகா வேகமாக குளித்து உடைகளை உடுத்தி கைத்தொலைப்பேசியில் வாட்சப் விவரங்களில் சற்று காக்காய் குளியலைப்போல சில பதிவுகளை படித்தும் எழுதியும் ஒரு அரை மணிநேரம் ஆனதும் இன்று இரவு சிவராத்திரி விஷேசம் என்பது ஞாபகம் வர அருகிலிருந்த சிவன் கோவிலுக்கு செல்கின்ற வழியில் இருந்த வில்வமரத்திலிருந்து வில்வதளங்களை பறித்துக்கொண்டு மலைப்பாதை வழியிலிருந்த நாகவல்லி நீலநிற புஷ்பங்களை பறித்து எடுத்துக்கொண்டு கோவிலையடைந்தபோது என்னோடு தொழிற்சாலையில் பணியாற்றும் மற்றொரு நபரும் வந்திருந்தார். 

இருவரும்  கோவிலின் உள்ளே சென்றபோது கோவில் பூசாரி எங்களைப்பார்த்ததும் வேகமாக என் அருகே வந்து வாருங்கள் இந்த சொம்பில் நீர் எடுத்துக்கொண்டு வாருங்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம் என்று கூறி கோவிலின் உள்ளே அழைத்துச்சென்றார். அந்தக் கோவில் எங்களது தொழிலக நிறுவனத்துக்கு சொந்தமான கோவில். அதோடு கோவில் பூசாரிக்கு மாத சம்பளமும்  நிறுவனமே வழங்குகிறது.

கிட்டத்தட்ட அரைமணிநேரம் அவர் எங்களுக்கு இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் எழுந்து நில்லுங்கள் என்று  சிவ லிங்கத்திற்கான அபிஷேகம் அர்ச்சனை பூஜை என ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத மந்திரங்களோடு ஒரு குட்டி யோகாசன பயிற்சி தருவதைப்போல பல பூஜை அர்ச்சனை செய்யச்சொன்னார், இடையில் அவரது வாயில் எதோ இருந்ததை (பாண் மசாலா என நினைக்கிறேன்) சற்று தூரத்திலிருந்த சன்னல் வழியாக தூ தூ என துப்பிவிட்டு வந்தார். என்னுடன் வந்திருந்த நண்பர் மெல்ல என்னிடம் இது என்ன பூஜையில் தூ தூ என்று கிசுகிசுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து அவர் மந்திரங்களைக்கூறி அதற்க்கு எங்களை வில்வதளத்தால் பூஜை செய்யச்சொன்னார். இடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வர மறுமுனையில் சற்று கோபமாக பேசுகிறார்கள் என நினைத்தேன் காரணம் பூசாரியும் சற்று காரசாரமாக இடை இடையே சில  திட்டு வார்த்தைகளையும் பிரயோகித்தார். என்னோடு இருந்தவர் மறுபடியும் கிசுகிசுத்தார் இதென்ன பூஜையின் இடையில் கரடி அதைவேறு கெட்டவார்த்தையில் திட்டுவேறு என்று முனகினார். சற்று நேரத்தில் பால்காரர் ஒருவர் பால் கொண்டுவர இன்று இதை கொண்டுவர இத்தனை நேரமா என்கிறார். இறுதியாக ஆரத்தி பாடலோடு சிவலிங்க பூசை முடிந்தது. 

பூசாரிக்கு தட்சிணையை தந்துவிட்டு கோவிலின் வெளியில் இருந்த திண்ணைபோன்ற உட்காரும் இடத்தில் ஒரு செய்தித்தாளை விரித்து இருவரும் உட்க்கார்ந்தோம். என்னுடன் இருந்தவர் இது சரியில்லை இப்படியா தூ என்று எச்சில் துப்புவது கேட்ட வார்த்தையில் திட்டுக்கள் வேறு இப்படியா பூசை செய்வது என்று மீண்டும் பேச்சை தொடங்கினார். 

நானும் சற்று யோசனையில் இருந்தபோது எனது உள்மனம் அதான் "மைண்ட் வாய்ஸ்" என்னோடு பேசியது இன்று இந்தநேரத்தில் கோவிலில் இருக்கும் நீங்கள் இருவரும் மற்றும் அந்த கோவில் பூசாரி இந்த மூவரில் யார் சிறந்த பக்தர் என்று உனக்கு தெரியுமா? என்று கேட்டது. 

அதிலென்ன சந்தேகம் நான் பக்தியோடுதான் கோவிலுக்கு வந்தேன் என்றேன். அதற்க்கு என் "மைண்ட் வாய்ஸ்" சொன்னது யார் முதல்நிலை பக்தர் என்று கேட்டது. அதற்க்கு நானும் பூசாரி தூ தூ என்று துப்பினார் என்று கூறும் என்னோடு வந்திருக்கும் எனது அலுவலக நண்பரின் மனநிலையில் அவர் பக்தியோடு இல்லை என்பதாக தெரிகிறது. அவர் கிசு கிசு என்று சொன்ன சில செயல்களோடு பூசாரியும் நடந்து கொண்ட விதம் பார்க்கும்போது பூசாரியும் பக்தி சிரத்தையோடு இல்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆவகே இதை அனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டு பூசை செய்த நானே முதல் நிலை பக்தனாக இருப்பேன் என்றேன்.

இதைக்கேட்ட எனது  "மைண்ட் வாய்ஸ்" சிரித்தது. பிறகு சொன்னது இந்த இடத்தில் இருக்கும் நீங்கள் மூவரில், பூசாரி மட்டுமே முதல் நிலை பக்தர் என்று கூறியது. இதைக்கேட்ட எனக்கு ஆச்சரியமாக இருந்ததால் அது எப்படி என்று கேட்டேன்.  அதற்க்கு என்  "மைண்ட் வாய்ஸ்" சொன்னது நீ வேண்டுமானால் பூசாரி பூசையின்போது துப்பியது மற்றும் திட்டியது என அவரது நடவடிக்கைகளைப்பற்றி அவரிடம் விளக்கம் கேட்டுப்பாரேன் உனக்கே புரியும் என்றது. 

இது சரி என்று தோன்றியதால் அவரிடம் சென்று இது பற்றி( இது=பூசாரி பூசையின்போது துப்பியது மற்றும் திட்டியது)கேட்டதும். பூசாரி சற்று திடுக்கிட்டு போனார் அதோடு நிற்காமல் "நானா அப்படியெல்லாம் செய்தேன் இருக்காதே" என்று சொன்னதைக்கேட்ட என்னுடன் இருந்த கிசு கிசு பார்ட்டிக்கு கோபம் வந்து காச்சு மூச்சென்று கத்திவிட்டார். பிறகு அவரை சமாதானம் செய்யவேண்டியாதாகப் போனது. இதையெல்லாம் பார்த்த கோவில் பூசாரி நான் அப்படி செய்தது எனக்கே தெரியவில்லை அப்படி உங்களது மனம் புண்படும்படி நடந்துகொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்கிறார். 

அந்தநேரம் என் "மைண்ட் வாய்ஸ்" சொன்னது... உங்கள் மூவரில் பூசாரி மட்டுமே முதல் நிலை பக்தர் என்பதை இப்போதாவது ஒத்துக்கொள்கிறீர்களா? என்று சொன்னதும் சற்று நிதானமாக யோசிக்கத்தொடங்கினேன்.  

அசரீரி ஒலித்தது என்று பழைய கதைகளில் சொல்வதை கேட்டிருப்போம் அது வேறு ஒன்றுமில்லை அது நமது மனதின் ஓசைதான் அதைத்தான் தற்போது நாம் "மைண்ட் வாய்ஸ்" என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வம் வாழ்கிறான். அந்த தெய்வம் எங்கே வாழ்கிறார்  என்றால் மனிதனின் மனங்களில் வாழ்கிறார். அந்த மனம் சொல்லும் செயலைத்தான் ஒவ்வொரு மனிதனும் செய்கிறான். செய்துகொண்டிருக்கிறேன் அப்படி நமது மனதை ஆட்கொண்டு இயக்குபவர்தான் தெய்வம். அப்படியென்றால் நம் மனதின் பேச்சுக்கள் தான் தெய்வ வாக்கு அல்லது தெய்வத்தின் அசரீரி வாக்கு மற்றும் இன்றய சூழலுக்கேற்ப நமது  "மைண்ட் வாய்ஸ்".     

ஆகவே கோவில் பூசாரியின் மனம் முழுவதும் ஆண்டவனின் சேவையில் இருந்தது ஆனால் அவரது செய்கைகள் மட்டும் அவரது எண்ணங்களுக்கு எட்டாத அனிச்சை செயலாக மட்டுமே இருந்திருக்கிறது.   என்பது புரிந்தபோது மீண்டும் கோவிலுக்குள்ளே சென்று தவறுகளுக்கு மன்னிப்பைக்கேட்டு மானசீகமாக சிவனிடம் வேண்டிக்கொண்டு எனது அன்றய பணிகளை செய்ய அலுவலகம் புறப்பட்டேன்.  

பலர் அவர்கள் பேசும்போது சில கெட்டவார்த்தைகளை பேச்சின் நடுவில் நுழைத்து பேசுவார்கள். ஒரு முறை அப்படிப்பட்டவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒன்று, இரண்டு, மூன்று... என்று அவர் பேசி முடிக்கும்வரை எண்ணி மொத்தம் 20 முறை அந்த கெட்ட வார்த்தையை உனது பேச்சின் இடையில் நீ உபயோகித்தாய் என்று சொன்னபோது.  நானா அப்படி அந்த கேட்ட வார்த்தையை சொன்னேன் இருக்காது என்கிறார். பிறகு ஒருமுறை அவர் பேச்சை அவருக்கே பதிவுசெய்து போட்டுக்காட்டினேன். ஆகவே அவர் என்ன பேசுகிறார் எப்படி அந்த வார்த்தையை உபயோகித்து பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அந்தஅளவில் அவரது செய்கை அனிச்சை செயலாக இருந்திருக்கிறது என்பதை அவர் உணர்ந்தபோது  மிகவும் வருந்தினார். 

இப்போது சொல்லுங்கள் கோவிலுக்கு போகிறவர்கள் எல்லோரும் பக்திமான்களா? கோவிலுக்கு சென்று வந்த எத்தனைபேருக்கு மனநிம்மதி கிடைத்தது. ஆகவே முதலில் கோவிலுக்கு எப்படிப்பட்ட மனநிலையில் போகவேண்டும் என்று தெரிந்துகொள்வது எத்தனை முக்கியம் என்பதை மேற்கண்ட ஒரு சிறு உதாரணத்தில் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். ஆகவே கோவிலுக்கு போகவே சாமி கும்பிடவே..... மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்சப்புள்ளையாட்டம் அது வெளுத்திருக்கணும் வெளுத்திருக்கணும் மல்லிகைப்பூவாக.

மீண்டும் அடுத்தப்பதிவில் சிந்திப்போம்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி 

No comments:

FREE JOBS EARN FROM HOME