FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, November 28, 2017

....அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு 30மணி நேரம். (24+6=30). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம்.. புரிந்ததா?????

....அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு 30மணி நேரம். (24+6=30). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம்.. புரிந்ததா?????

நான் பலநேரம் இதுபற்றி சிந்தித்ததுண்டு,  இன்னமும் கூட பலர் அவர்களின் அலுவலகத்தில், அவர்களது வேலையை செய்யாமல் பிறரது வேலையை செய்து மாத சம்பாத்தியம் பெறுகிறார்கள்.  எப்போது ஒருவர் தன்னுடைய வேலை இது என்று உணர்ந்து, தனது வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும் பெற்று உயர்வு பெறுகிறார்களோ, அவரே அவர்களது வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களது ஆரம்ப இடத்திலேயே சரியாக வாழக்கையை அமைத்துக்கொள்ளாமல் திணறி தனது முடிவுக்கு தானாகவே காரனமாகிவிடுகிரார்கள். இதை வைத்துத்தான் நீங்கள் பணிபுரியும் உங்களின் நிறுவனம் உங்களின் திறனை மதிப்பிடுகிறது.
உதாரணத்திற்கு வகுப்பில் உள்ள மாணவர்களிடையே நன்றாக படிப்பவன் சுமாராக படிப்பவன் என்ற பேதம் இருந்தாலும் யார் தன் நிலையிலிருந்து மிகுந்த முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்களே ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவருவார்கள். அந்த மாணவனே சிறந்த மாணவனாக ஆசிரியரால் முன்நிருத்தப்படுகிறான். ஆகவே நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களுக்குண்டான வேலையைமட்டும் சிறப்பாக செய்து பெரும் புகழும், அதற்குரிய ஊதியமும் பெற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். சிலருக்கு தன்னுடைய வேலை எது என்றுகூட பிரித்து தெரிந்துகொள்ளக்கூடிய திறமையில்லாமல், மற்றவரது வேலைதான் தன்னுடைய வேலை என்று வாழ்க்கையை வாழத்தெரியாமல் வீனடித்துக்கொண்டிருக்கிரார்கள். இந்தப் பதிவை மேலும் தொடர்ந்து படியுங்கள் பல விவரங்கள் உங்களுக்குப் புரியும் . 


முதலில் அலுவலகத்தில் உங்களது பனி எது என்று தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் சேர்த்து செய்தால் தான் நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் உங்களின் சொந்த முயற்சிக்கான வேலைகளையும் செய்யவேண்டும். 

உதாரணமாக உங்களின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் பணிநிரந்தரம் மற்றும் பதவி உயர்வு பெற்றிட தேவையான முயற்சிகளையும், உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய நேரமாக, உங்களின் உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு 30மணி நேரம். (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = மொத்தம் 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது இது உங்களுக்கு, பணம்பழம போன்ற நெல்லிக்கனி"  (புரிகிறதா? இல்லையென்றால் மேற்கூறிய உதாரணத்தை திரும்ப திரும்ப படித்துப்பாருங்கள் புரியும்).

மேலும் தற்போது உங்களின் ஊதியம் உதாரணமாக 1000/- என்றால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளின் அது இரண்டு மடங்காக 2000/- என ஊதியம் அதிகமாக கிடைக்குமாறு, அதற்குத் தேவையான முயற்சிகளை செய்வதுதான், உங்களின் உயர்வுக்கான சொந்த முயற்சிக் குறிக்கோளாக இருக்குமாறு, நீங்கள் தினமும் சேமிக்கும் உங்களின் உபரி நேரத்தில் அதற்க்கான முயற்சிகளை செய்யும் நேரமாக அமைத்துக்கொள்ளுங்கள். 

பாடல்:- "பொன்னாள் இதுபோல் வருமா இனிமேலே"...  

....அப்படி நீங்களும் பயனடையும்போது அவசியம் உங்களது அனுபவத்தை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். 

நன்றிகளுடன் கோகி -ரேடியோ மார்கோனி.  

Wednesday, November 22, 2017

கோடீஸ்வரர் ஆகும் திட்டத்தில் ஒரேமாதத்தில் ஒருகோடி பெற மிகச்சுலபமான வழிமுறைகள் இதோ இங்கே:

கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி 

-o-o-o-o-O-o-o-o-o-

கோடீஸ்வரர் ஆகும் திட்டத்தில் ஒரேமாதத்தில் ஒருகோடி பெற மிகச்சுலபமான வழிமுறைகள் இதோ இங்கே:-


வரும் திசம்பர் மாதம் முதல் தேதியன்று என்னிடம் ஒரு சிறுசேமிப்புக் கணக்கு துவங்குங்கள். 

01.12.2017 அன்று ஒரே ஒரு பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.

02.12.2017 அன்று முதல் நாள் போல இரு மடங்கு அதாவது இரண்டே இரண்டு பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.

03.12.2017 அன்று முதல் நாள் கொடுத்த இரண்டு பைசா போல இரண்டு மடங்கு அதாவது 4 பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.

இதுபோல 1.12.2017 முதல் 31.12.2017 வரை, முதல் நாள் சேமித்தது போல இரண்டு மடங்கு அடுத்த நாள் சேமிக்க வேண்டும், நீங்கள். 

வாழ்க்கையில் எவ்வளவோ சம்பாதிக்கும் நீங்கள் இது போல செய்வது கஷ்டமா என்ன? 

அதுவும் மிகவும் நம்பிக்கையான நாணயமான என்னிடம், அதுவும் நீங்கள் சேமிக்கத்தானே போகிறீர்கள்! 

இதில் வெட்டிச்செலவோ வீண்செலவோ ஏதும் இல்லையே!! 

ஒரே ஒரு பைசாவில் ஆரம்பிக்கும் மிகவும் எளிமையான சுலபமான சேமிப்பு அல்லவா!!!

ஒரு மாதம் அதாவது திசம்பர் 31 நாட்கள் முடிந்ததும், அதாவது 01.01.2018 அன்று,  நான் சுளையாக உங்களுக்குத் தரப்போவதோ 

"ஒரு கோடி ரூபாய்"


இந்த கோடீஸ்வரர் ஆகும் திட்டத்தில், முதலில் என்னிடம் பெயர் பதிவு செய்துகொள்ளும் 100 நபர்களுக்கு ஒரு பவுன் அதாவது 8 கிராம் தங்க நாணயம் இலவசம்; ஆடித்தள்ளுபடி போல. 25-12-2017 அன்று உங்களுக்கு வழங்கப்படும். 

மொத்த வாடிக்கையாளர்களின் பெயர்களை குலுக்கல் நடத்தி அதில் விழும் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 25 லட்ச ரூபாய் விலையுள்ள மிக உயர்ந்த கார் அல்லது வீடு  பரிசும் உண்டு. கார்/வீடு  பெறும் அதிர்ஷ்டசாலி நீங்களே தான். முந்துங்கள்! 
01-12-2017 0.01
02-12-2017 0.02
03-12-2017 0.04
04-12-2017 0.08
05-12-2017 0.16
06-12-2017 0.32
07-12-2017 0.64
08-12-2017 1.28
09-12-2017 2.56
10-12-2017 5.12
11-12-2017 10.24
12-12-2017 20.48
13-12-2017 40.96
14-12-2017 81.92
15-12-2017 163.84
16-12-2017 327.68
17-12-2017 655.36
18-12-2017 1310.72
19-12-2017 2621.44
20-12-2017 5242.88
21-12-2017 10485.76
22-12-2017 20971.52
23-12-2017 41943.04
24-12-2017 83886.08
25-12-2017 167772.16
26-12-2017 335544.32
27-12-2017 671088.64
28-12-2017 1342177.28
29-12-2017 2684354.56
30-12-2017 5368709.12
31-12-2017 10737418.24

என்ன நண்பர்களே / நேயர்களே நீங்கள் தயாரா????????????????? உங்கள் கணக்கை துவங்கவேண்டிய இடம் http://gopalkrishnaniyer.blogspot.in 



Wednesday, November 1, 2017

"வருமானவரிக்கணக்கில் அதிகப்படியான வருமானவரி பிடித்தமான ரூபாய் 12,627 தொகையை உங்களுக்கு திரும்பி உங்களது வங்கிக்கணக்கில் வழங்கவுள்ளோம்"

"உங்களது வருமான வரிக்கணக்கில் அதிகப்படியான வருமானவரி பிடித்தமான ரூபாய் 12,627 தொகையை திரும்ப உங்களது வங்கிக்கணக்கில் வழங்கவுள்ளோம்"

மேற்கண்ட படத்தில் உள்ள போலி மின்னஞ்சலை பாருங்கள். அப்படியே அச்சு அசலாக இந்திய வருமான வரித்துறையிலிருந்து வந்த மின்னஞ்சல் போலவே இருக்கும் ஒரு போலி மின்னஞ்சல் இது. "உங்களது வருமானவரிக்கணக்கில் அதிகப்படியான வருமானவரி பிடித்தமான ரூபாய் 12,627 தொகையை உங்களுக்கு திரும்பி உங்களது வங்கிக்கணக்கில் வழங்கவுள்ளோம்" என்ற  இப்படி ஒரு இ-மெயில் உங்களுக்கு வந்தால் மகிழ்ந்துவிடாதீர்கள். உணர்ச்சிவயப்பட்டு அவர்கள் சொடுக்க சொன்ன இனைய முகவரியில் சென்று உங்களைப்பற்றிய, தொலைப்பேசி, வங்கிக்கணக்கு போன்ற முழுவிவரங்களையும் தந்தால், உங்களது வாங்கிக்கணக்கிலிருக்கும் மொத்த பணமும் காணாமல் போகிவிடும்.. 

இந்திய வருமானவரித்துறை என்றிருக்கும் எழுத்துக்களுக்கு பின்னால் மறைந்திருக்கும் சொடுக்கு வலைதள முகவரி, வேறு ஒரு நாட்டின் போலி வலைதளத்தின் முகவரியாகும். மின்னஞ்சலில் தரப்பட்டிருக்கும் "இங்கே சொடுக்கவும்" என்கிற குறியீட்டின் பின்னால் நம் கண்களுக்கு தெரியாத அளவில் வேறு ஒரு நாட்டின் போலி இணையதள முகவரி தரப்பட்டிருக்கும். நீங்கள் அந்த குறிப்பிட்ட இடத்தை சொடுக்கியவுடன் அந்த வெளிநாட்டினரின் இணையத்தளத்திற்குள் சென்று அவர்கள் கேட்ட அனைத்து விவரங்களையும் தந்ததும். அந்த வெளிநாட்டு போலி இனைய நிறுவனத்தினர் உங்களது வங்கியிலிருக்கும் பணத்தை முழுமையாக அவர்களின் போலி வாங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டு அந்த தொகையை வங்கியிலிருந்து எடுத்தபிறகு, அவர்களின் வாங்கிக்கணக்கை மூடிவிட்டு கம்ம்பிநீட்டிவிடுவார்கள். பணத்தை பறிகொடுத்த நீங்கள்தான் வெளிநாட்டிற்கு மாற்றப்பட்ட உங்களது பணத்தை பெறுவதற்கான எந்த வழி வகைகளும் கிடைக்காமல் ஏமாந்துபோக நேரிடும்....

ஆகவே எந்த இனைய வலைத்தள முகவரியை சொடுக்கும்போதும், நீங்கள் செல்லவேண்டிய சரியான முகவரியின் இணையதள வலைப்பக்கம் திறக்கிறதா என்று கணினி திரையின் மேற்பகுதியில் இணையதளத்தின் முகவரியைக்காட்டும் பகுதியில் http://xxxxxxx சரியாக முகவரியை காட்டுகிறதா என்பதை முழுமையாக உறுதிசெய்துகொள்ளுவது மிக மிக அவசியம். 

இதில் ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு வந்த மின்னஞ்சலின் சொடுக்கு பட்டனை சொடுக்கியபோது ஒவ்வொருநாளும் ஒவ்வொரு இணையதள முகவரி மாறிக்கொண்டேயிருந்தது ஒருநாள் இங்கிலாந்து நாட்டின் www.xyz.co.uk இனைய முகவரியும் வேறொரு நாளில் நெதர்லாந்து நாட்டு www.xyz.nl இனைய முகவரியும், மற்றும் ரஷ்யாவின் இனைய முகவரி என்று... ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டேயிருந்தது.

ஆகவே உங்களது சொந்த விவரங்களை கேட்கும் எந்த ஒரு வலைத்தளத்தையும் உடனே நம்பி விவரங்களை பகிர்ந்துவிடாதீர்கள். போலியான முகவரி என்று எப்படி தெரிந்துகொள்வது என்பதற்கு பல வழிகள் உள்ளது அதற்காகவே சில கணினி செயலிகளும் உள்ளது அவைகளை பயன்படுத்தி எந்த ஒரு வலைதள முகவரியையும், மின்னஞ்சல் முகவரியையும், தொலைபேசி போன்றவைகளையும் உண்மைத்தன்மையை அலசி ஆராய்ந்து தெரிந்துகொள்ளமுடியும். 

@ போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிதல்:-  ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிய நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள் அங்கே கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி முகவரி யாருடையது சரியானதா போன்ற விவரங்களைப்பெறலாம், போலியைக்கண்டறியும் அந்த இணையதளத்துக்கான லிங்க் : http://www.verifyemailaddress.org/

@ வருமான வரி செலுத்துவோர் சிலருக்கு போலி மின்னஞ்சல் ஒன்று கிடைக்கப் பெறுவதாகவும், அந்த மெயிலுக்கு எந்தவிதமான பதில் அளிப்பதோ அல்லது பதிவு இறக்கம் செய்யவோ வேண்டாம் என்று இந்திய வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

@ உங்களுக்கு ஏதேனும் போலியான மின் அஞ்சல் வந்தால் வருமான வரி துறையின் தேசிய இணையதளத்தில் உள்ள >'ரிப்போர்ட் ஃபிஷிங்' பகுதியை பார்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் வருமான வரி செலுத்துவோர் வருமான வரி துறையின் >www.incometaxindia.gov.in இணையதளத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வருமான வரி துறை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தவறாமல் பின்னூட்டமிடுங்கள். மேலும் விவரம் தேவைப்படுவோர்கள் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

FREE JOBS EARN FROM HOME