FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, August 17, 2017

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! A picture is worth a thousand words!

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! A picture is worth a thousands of words!

இந்த ஓவியப்படத்தைப் பார்த்த உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ...... 

வாழ்க்கையில் அனைவருக்கும் இது ஒரு உதாரணம்.

இந்த ஓவியம் கூறும் கருத்து!!!!

@பெரிய படகு (கம்பெனி) மூழ்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட நலன்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பெரிய படகை (கம்பெனி) காப்பாற்ற யாரும் முயற்சி செய்யவில்லை. அவர்களது சொந்த தனிப்பட்ட இலாபங்களைத்தான், தன்னகப்படுத்தும் முயற்சியை செய்கிறார்கள். 

அவர்களால் அந்த பெரிய மூழ்கும் கப்பலை (மோசமான நிலையிலிருக்கும் நிறுவனத்தை) காப்பாற்றமுடியும். ஆனால் அவர்கள் தங்களுடைய சிறிய படகான சுய லாபத்தை பெறுவதே தனது  முழுமையான நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். 

பெரிய படகு (கம்பனி) மூழ்கிவிட்டால் அவர்கள் சிறிய படகில் ஓடிவிடுவார்கள் ... இது பெருநிறுவன அரசியலா அல்லது குறுகிய எண்ணம் கொண்ட தொழிலாளர்களின் என்னமா? 

பெரும்பாலான பொதுநிறுவனங்கள்கூட  இதுபோல் செயல்படுகின்றன. பல தனியார் நிறுவனத்திலும் சில மேலாளர்கள் இப்படித்தான் சுய நலம் கருதி வேலை செய்கின்றனர்.

@ மக்கள் ஒரு அணியாக திரண்டு மிகப்பெரிய அரசு கப்பலை இயக்கி பயன்பெற நினைக்கிறார்கள் ஆனால் சில சுயநலவாதிகள் அந்த அரசுக்கப்பலை உடைத்து சிறு சிறு படகுகளாக்கி பாழ்படுத்திவிடுகிறார்கள்.  

@ ஒரு அரசியல் கட்சியை (கப்பல்), உடைத்து தனித்தனியாக செல்லும் சுயநலவாதிகளின் அரசியல் (படகுப்) பயணம். 

@ பொதுவாழ்க்கையில் சில சுயநலவாதிகளின் சூட்சமம் இது.

@ சுயநலத்தோடு விளையாடும் ஒரு விளையாட்டு அணிகளுக்கும் இது பொருந்தும்.

ஒரு நிறுவனம் நிலைத்து நிற்கவோ அல்லது நிர்மூலமாவதோ அந்த நிறுவனத்தின் நிர்வாக மேலாளரின் கையில் இருக்கிறது. அவரின் அந்த நிறுவனத்தை, மிகச் சிறந்த நிலைக்கு உயர்த்தும் அவரது  எண்ணத்தை, அவரோடு சேர்ந்த அந்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களின் மனங்களிலும் விதைக்கவேண்டும்... அப்படி அனைவரோடு சேர்ந்த அவரது சிறந்த எண்ணம்தான் அவரையும் அவரது நிறுவனத்தையும் உயர்த்தும். 

ஆகவே உங்களோடு சேர்ந்த மற்றவர்களையும் உயர்த்துங்கள் நீங்களும் உயர்வீர்கள்.... 

நன்றிகளுடன்  கோகி-ரேடியோ மார்கோனி.

Friday, August 11, 2017

“இந்தியாவில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கும் இன்னும் 4ஜி(4G) லைசென்ஸ் வழங்கப்படவில்லை."

“இந்தியாவில் யாருக்குமே அதாவது எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கும் இன்னும் 4ஜி(4G) லைசென்ஸ் வழங்கப்படவில்லை." மக்களை ஏமாற்றும் விதத்தில் பொய்யான விளம்பரம் செய்துகிட்டிருக்காங்க. ஆனால் ஒரு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அப்படி செய்ய முடியாது. அப்படிச் செய்பவர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்கனும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டால் `4ஜி லைசென்ஸ் யாருக்கும் இல்லை’ என்றே பதில் வரும். என்கிறார் பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் திரு சிவகுமார். 

தொலைத்தொடர்புத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் ஆசிர்வாதம் ஆச்சாரியிடம் `உண்மையிலேயே இந்தியாவில் 4ஜி லைசென்ஸ் இருக்கிறதா இல்லையா?’என்று கேட்டோம்.

“4ஜி உரிமம் இந்தியாவில் யாரிடமும் கிடையாது. BWA தான் இருக்கு. பிராட்பேண்ட் வயர்லெஸ் ஆக்சஸ் என்னும் இந்தத் தொழில் நுட்பம் இன்டர்நெட் வசதியை வேகப்டுத்துகிறது. இது இதற்கு முன் இருந்த 2ஜி, 3ஜியை விட அதிகம் அவ்வளவுதான்; சர்விஸ் ப்ரொவைடர்கள் இதைத்தான் 4ஜி என்று சொல்லுகிறார்கள். ஜியோ வைப் பொறுத்தவரை அவர்கள் வாய்ஸ் காலுக்கு அனுமதி பெறவில்லை. அவர்களுக்கும் BWA(Broadband Wireless Access) மட்டுந்தான் தரப்பட்டுள்ளது. தங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்கள் இணைய வழி தொடர்பை ஏற்படுத்தி வாய்ஸ் கால் கொடுக்கிறார்கள். உலகம் பூராவும் வாய்ஸ் காலுக்குக் கட்டணம் கிடையாது. அவர்கள்(வெளிநாடுகளில்) இன்டர்நெட் பயன்பாட்டுக்கு மட்டுந்தான் காசு வாங்குகிறார்கள்.

அதற்குக் காரணம் மக்கள் இப்போது பேசுவது குறைந்து இமெயில், வாட்சப், பேஸ்புக், ட்விட்டர் என மாறிக் கொண்டிருப்பதுதான். இங்கேதான் (இந்தியாவில்) போன் பேசுவது இன்னும் அதிகமாக உள்ளது. அதனடிப்படையில் உலகம் இந்தியாவை `வாய்ஸ் மார்க்கெட்’ என்று சொல்லுகிறது. இப்ப அதுவும் குறைந்து கொண்டே வருகிறது” என்று டெக்னிக்கலாகச் சொன்னார்.....

இந்த உலகத்த்தில் மிக உயர்ந்த சிகரமான "எவரெஸ்ட்" சிகரம் நம்ம நாட்டில்தான் உள்ளதா? .... மேற்கண்ட செய்திகளையும் செயல்களையும் பார்த்தால், நம்ம நாட்டுக்காரங்க உலகத்தின் மிக உயரமான சிகரத்தையே தூக்கி சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறதே .... கோகி.

FREE JOBS EARN FROM HOME