FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, January 10, 2015

அடுத்த சில நாட்களில் இந்திய வட மேற்கு எல்லைப்பகுதியில் ஒரு பூகம்பம் நிகழ சாத்தியக்கூறுகள் உள்ளது.

12-05-2015 12.30am இன்று நேபாளம் மற்றும் சீனா,  ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பாக, தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களிலும் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது. இன்றைய இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “பூகம்பத்துக்குப் பிறகான பூமியின் ஊடாக சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறை கிட்டத்தட்ட 6 மீட்டர்கள் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வு” 

“பூகம்பம் காரணமாக பாறைகள் பூமிக்கு அடியில் இடப்பெயர்வு கண்டுள்ளதால் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் குறித்து ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் டேனியல் ஜக்ஸா கூறும்போது, மேலும் ஒரு சுனாமி வருவதற்கான சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்தார், அதாவது ஆசியப்பாரைத்தட்டு ஆஸ்திரேலிய பாரைத்தட்டான சுண்ணாம்பு பாறைக்கடியில் மிகப்பெரிய அழுத்தத்தால் தொடர்ந்து அழுத்திக்கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் ஆசியப்பாரைத்தட்டு பசிபிக் கடல்பகுதியில் ஒரு பிளவை சந்திக்கக்கூடிய சூழல் எப்போதுவேண்டுமானாலும் ஏற்ப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு பிளவு ஏற்ப்ப்படும்போது இந்திய மதுரம் இந்தோனேசிய பசிபிக் கடல்பகுதியில் மிகப்பெரிய சுனாமி பேராலை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள். 

25-Apr-2015. Massive 7.5 Magnitude Earthquake in Nepal, Tremors Across Northern India.

சற்றுமுன் 25-ஏப்பரல்-2015 11.50 அளவில்  புது  தில்லி அதன் சுற்றுப்பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் 7.5 அளவில் இருக்கும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது  நான் ஏற்க்கனெவே குறிப்பிட்டபடி பூகம்பம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை சென்ற மாதம் (மார்ச் மாதம்) வரும் என்று எதிர்ப்பார்த்தேன் ... விவரங்களுக்கு எனது வலைபூவில் ....
அடுத்த சில நாட்களில் இந்திய வட மேற்கு எல்லைப்பகுதியில் ஒரு பூகம்பம் நிகழ சாத்தியக்கூறுகள் உள்ளது. ....இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவின் மேற்கு கடலோரப்பகுதியின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.4 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று 10-01-2015 காலை 4.29 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், கடலோரப்பகுதியின் வடக்கு பகுதியில் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதாவது தென் கெழக்கு ஆசிய நிலப்பரப்பின் மேல் தட்டு சில அடிகள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது தெளிவாகத்தெரிகிறது, இதேபோல 1994 வருடம் இந்தோனேசியாவில் 6.2 புள்ளிகளாக நினலடுக்கம் பதிவானபோது, அடுத்த சில நாட்களில் இந்தியாவில்  உத்திரப்பிரதேசத்தின் வடக்கு பகுதியில் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.  ஆகவே அடுத்த சில நாட்களுக்குள் இந்தியாவின் வடபகுதியிலோ அல்லது வட கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலோ ஒரு பூகம்பம் நிகழ சாத்தியக்கூறுகள் உள்ளது.... இதற்க்கு முக்கியக்காரணம் ஆசியாவின் பூமத்தியரேகைக்கு கீழ் பகுதியில் அமைந்த பூமியின் மேல் உள்ள பாறைத்தட்டு கிழக்கு நோக்கி நகர்கிறது என்பதை சென்ற 10 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கிறது (இது குறித்து பலவிவரங்களை என்னுடைய Blogspot இணையப்பக்க பதிவில் காணலாம்) .. மேலும் நடக்கப்போவதை பொறுத்திருந்து பார்ப்போம் ..... ஆலோசகர் - கோகி 


24 மார்ச் மாதம் 2015. இந்திய தலைநகரான கிழக்கு தில்லியிலிருந்து சுமார் 49 கி மி தூரத்தில் அமைந்திருக்கும் உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் நேற்று மாலையில் 7 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகி இருந்தது.அடுத்த சில மணிநேரங்களிலேயே இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு 11.42 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சேத விவரம் ஏதும் ஏற்படவில்லை. [ஆஸ்திரேலியா  மற்றும் ஆசிய பூமி மேல்பரப்பு தட்டுக்கள்  ஒன்றன்மீது ஒன்று அமைந்திருக்கிறது,  இந்த தட்டுக்களின் எல்லை (முனை) இந்தியப்பெருங்கடலின் அடியில் உள்ளது. (குறிப்பாக :- ஆசியத்தட்டு கீழும் ஆஸ்திரேலியாவின் சுண்ணாம்பு பாறை தட்டுகள் மேல்புறமும் அழுத்தம் ஏற்ப்பட்டு நகர்ந்ததினால் ஏற்ப்பட்ட விளைவுதான் 00:58:53 நேரம் டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் தென் இந்திய சுனாமியாக மாறியது. இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து,ந்தோனேசியாமலேசியாஇலங்கைந்தியாமாலைதீவுகள்ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர். அதோடு பல வருடங்களாக ஆசியத்தட்டு கீழ்நோக்கி நகர்கிறது ஆகவே தென் இந்தியப்பகுதி சிறிது சிறிதாக கடலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கிறது. )] 

#டக்னா, மார்ச் 23-தென் அமெரிக்க நாடான பெரு மற்றும் சிலி எல்லைப்பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
பெருவின் தெற்குப்பகுதியில் உள்ள டக்னா நகரம் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நகரமான டக்னாவில் 2,50,000 மக்கள் வசிக்கின்றனர். சிலி நாட்டில் இருந்து 35 கி.மீ. தொலைவில் டக்னா உள்ள நிலையில், சிலியின் புட்ரே நகரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், பூமிக்கடியில் 128.1 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலநடுக்கத்தின் தாக்கம் டக்னா நகரத்திலிருந்து 105 கி.மீ. தூரம் வரையிலும், சிலியில் உள்ள மிகப்பெரிய நகரமான அரிக்கா மற்றும் புட்ரே ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது. எனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

#19 March 2015 12:53 AM IST இந்தோனேசியாவின் மலுக்கா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்தது.
ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகள் பதிவான இந்த நிலநடுக்கம், அந்த நாட்டின் கோடா டெர்னேட் நகருக்கு வடமேற்குக் கடல் பகுதியில், 41 கி.மீ. ஆழத்தில், செவ்வாய்க்கிழமை ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்தது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
புவித் தட்டுகள் ஒன்றோடு ஒன்று உராயும் "நெருப்பு வளையம்' என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
கடந்த 2004-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமிக்கு இந்தோனேசியாவில் 1.7 லட்சம் பேரும், இந்தியப் பெருங்கடல் நாடுகள் பலவற்றில் ஆயிரக்கணக்கானோரும் பலியாகினர் என்பது நினைவுகூரத் தக்கது.

# டோக்கியோ, பிப். 23-2015 ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.  கிழக்கு ஜப்பானில் உள்ள ஹோன்ஷூ கடற்பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மிதமான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று கூறியுள்ளது. இப்பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

# February 11-2015 02:43 PM IST..அந்தமானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை.



#புதுடெல்லி, பிப்.2-2015 மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 85 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை

FREE JOBS EARN FROM HOME