FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, November 19, 2014

பார்ப்பதற்கு நானும் மானவனைப்போலவே இருந்தேன், என்னை ஆசிரியர் என தனிமைப்படுத்தி காண்பிப்பதற்காகவே "வேஷ்டி" உடை அணிந்து செல்லவேண்டியதாக இருந்தது...

எனது நாட்குறிப்பேட்டின் வாடாமலர்ப் பக்கங்கள்:-1987
# 1987என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்:- நினைத்துப்பார்க்கிறேன்.... நான் படித்த அதே அரசாங்கப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராரக [LOE- LIFE ORIENTATION EDUCATION- வாழ்க்கைகல்வி(பொறியியல்)] பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை,(Dr.Sarvepalli Radhakrishnan .சர்வபள்ளி, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் படித்த பள்ளி) எனக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்களுடன் சமமாக ஆசிரியர் ஒய்வு அறையில் உட்கார மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலை, ஒரு ஆசிரியை, நான் படிக்கும் பொது எனக்கு ஆசிரியையாக இருந்தவர், அவர் என்னை "வாங்க தம்பி சார் உட்காருங்க" என்பார். இதை எல்லாம் விட, வகுப்பில் யார் ஆசிரியர் என தெரியாத அளவில் நானும் மானவனைப்போலவே இருந்தேன். என்னை ஆசிரியர் என தனிமைப்படுத்தி காண்பிப்பதற்காகவே "வேஷ்டி"  உடை அணிந்து செல்லவேண்டியதாக இருந்தது.

1987 இல் மாதம் 300 சம்பளம் பெரும் இந்த பகுதிநேர ஆசிரியற்பணி தேவைதான ? என்கிற அப்பாவின் நியாயமான கேள்விக்கு கிடைத்த பரிசுதான் 1300 சம்பளத்தில் ஒரு பிரபல தனியார் IT கம்பனியில் வேலையில் சேர்ந்தது.... நான் ஆசிரியர் பணியிலிருந்தபோது அதே பள்ளியில் என்னுடன் பணியாற்றிய பகுதிநேர வணிகவியல் ஆசிரியர் ஒருவரை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும், பகலில் அவரின் மாணவனுக்கு ஆசிரியராகவும், மாலையில் அந்த மாணவனின் கீழ் அவனது தாத்தாவின் மொத்தவியாபாரக் கடையில் பணிபுரியும் கணக்கராக பணியாற்றிய அந்த ஆசிரிய நண்பர், அவரின் அந்த மாணவனால் பெற்ற கஷ்டங்கள் ...அந்த மாணவன் ஆசிரியர் என்று பாராமல் தனக்கு கீழ் வேலைசெய்கிறார் என்கிற மமதையால், கடையை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு பிறகு கணக்கு எழுதுங்கள் என்று கட்டளையிட்டது, போன்ற இன்னும் பல கொடுமைகளை அனுபவித்தார் என்பதை அந்த மாணவன் அவனது பள்ளி தோழர்களுடன் பேசியதிலிருந்து தெரிந்துகொண்டேன், பிறகு என்னுடன் பணியாற்றிய பகுதி நேர வணிகவியல் ஆசிரியரிடம் விசாரித்ததில், அவர் பெருந்தன்மையோடு " மாணவன்தானே  -போகப் போகப் தெரியும்.. ஆசிரியரின் அருமை புரியும் .... என்றார்....."  (கொடுமையிலும் கொடுமை ஏழ்மையில் படித்தவர்களுக்கு வேலையில்லா கொடுமை.... அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் ....கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது . என்னும் ஔவை வாக்கை நினைத்து வியக்கவைப்பது இந்த பாடல் http://youtu.be/O-zgx1UuvN0

ஓர் ஆயிரம் நிலவே வா- "நான் முதல் பரிசை பெற்றேன்" .

மலரும் நினைவுகள்:-"ஓர் ஆயிரம் நிலவே வா ... ஓர்.. ஆயிரம் நிலவே வா... (என்ன துடிப்போ அவள் நிலை, நீ உணர மாட்டாயா)என் கல்லூரி நாட்களை நினைக்கும்  போது  நிச்சயம் இந்த பாடல் ஞாபகம் வரும். ஏன் எனில், எனது கல்லூரி விழா ஒன்றில்,  யார் ஆதிகநேரம் சிறப்பான அறுவை நிகழ்ச்சி (பேசிப்பேசியே பொறுமையின் உச்சகட்ட கடலை வறுப்பது)  செய்கிறார்களோ அவர்களுக்கு "அறுவை மன்னன்" பரிசு என்கிற பந்தயத்தில் நான் முதல் பரிசை பெற்றேன் . இதோ அந்த பாடல்... 1000நிலவே வா , 999நிலவே வா , 998நிலவே வா, 997நிலவே வா, 996நிலவே வா, 995நிலவே வா........................தாங்கமுடியாமல் மேடயிலேருந்து குண்டுகட்டாக எனை துக்கி கீழ் இறக்கிவிட்டுவிட்டார்கள் (பின் குறிப்பு:- பரிசையும் தந்துதான் இறக்கிவிட்டார்கள்)  இப்படிக்கு கோகி. http://youtu.be/oHUsQGYEen4

பெண்களின் "சவுரி" முடியின் இரகசியம் .....

மலரும் நினைவுகள் :- மலரும் நினைவுகள் :- "கூந்தல் கருப்பு, குங்குமம் சிகப்பு " இந்த பாட்டை கேட்டாலே எனக்கு அந்த நாள் (பள்ளிக்கூட நாட்கள்) ஞாபகங்கள்.... ,

நானும் எனது நண்பனும் இப்படித்தான் எங்கு சென்றாலும் இணைந்தே செல்வோம்" அப்போது நாங்கள்(1976) உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது நடந்த இந்த இனிமையான சம்பவம்... 

நானும் எனது நண்பன் சுந்தர வடிவேல் இருவரும் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் 6,7 பெண்கள் (மாணவிகள்) வழியை மறைத்தபடி... பேசியபடியே நடந்துவர.. எங்களுக்கு பின்னால் வரவும் சங்கடம் (பெண்கள் பின்னாடி போறாங்க பார் என்பார்கள்) முந்தி செல்லவும் முடியாமல் தர்மசங்கடமாக இருந்தது.....

ஒரு யோசனை தோன்ற சட்டேன்று...அங்கபாருடா.. அந்தப்பெண்ணின் தலை "சவுரிமுடி" பின்னல் பிரிந்துவிட்டது".... என கூற.  

எல்லா பெண்களும் தனது பின்னல் முடியை தடவிப்பார்க்க ... 

அதற்குள் என் நண்பன் அடடா எல்லாரும் "சவுரிமுடி" வச்சிருக்காங்க போளிருக்குடா என கூற... 

எல்லா பெண்களும் வேக்கப்பட்டுக்கொண்டே ஓர் ஓரமாக சென்று வழிவிட, 

நங்கள் வழி கிடைத்த சந்தோசத்தில் வேகமாக அவர்களை கடந்து முன்னே சென்றோம்... 

அதுமட்டுமின்றி அதன்பிறகு அந்த பெண்களின் கூட்டத்தை கண்டாலே, எனது நண்பன் இந்த பாடலை சத்தமாக பாடி அவர்களை வேக்கப்படவைப்பதை நானும் ரசித்திருக்கிறேன்... 

இன்றும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த நினைவுகள் நெஞ்சில் நீங்க நினைவுகள்.... 

பாடல் கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு...
திரைப்படம்:- பரிசு (1969)
கே வி மஹாதேவன் அவர்களின் இசையில்...
பாடியவர்  TMS மற்றும் P சுசீலா அவர்கள் 
காட்சியில் பாடியவர்கள் மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன் மற்றும் சாவித்திரி ஜோடி. 

வாங்க நாமும் அந்தப் பாடலை கேட்கலாம்.....

https://youtu.be/96RTkEvCiFw

நன்றிகளுடன் கோகி -ரேடியோ மார்கோனி.

"நான் அவரின் தீவிர ரசிகன் என்பதில் தற்போதுதான் இன்னும் அதிக பெருமைபடுகிறேன்"

மலரும் நினைவுகள்:- நான் எப்படி நடிகர் சிவகுமார் அவர்களின் ரசிகனானேன்? 

....அப்போது நான் ஏழாம் வகுப்பில் படித்துகொண்டிருந்தபோது நடந்த நிகழ்வு அது ... 

எனது வகுப்பில் படித்துகொண்டிருந்த மாணவர்கள் (மாணவிகளும் ) எம் ஜி ஆர் மற்றும் சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகர்களாக இருந்தார்கள், அத்துடன் அவர்களிடம் இருந்த வண்ண வண்ண படங்களை என்னிடம் காட்டி, என்னிடம் அது போல் இல்லை என்பதால் என்னை கேலி செய்துகொண்டிருந்தர்கள். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் நான் நடிகர் சிவகுமார்அவர்களின் ரசிகன் என சொல்லிவிட்டேன்..... 

..சற்று சப்தமாக கத்திவிட்டேன் போலிருக்கு, வகுப்பில் இருந்த அணைத்து மாணவ மாணவிகள் (என்வகுப்பில் மொத்தம் அறுபத்தி ஏழு மாணவ மாணவிகள் ) என்பக்கம் திரும்ப... அன்று ஆரம்பித்ததுதான், ஒவ்வொரு முறையும் நடிகர் சிவகுமார் அவர்களின் திரைப்படம் திரை இடப்படும்போதேல்லாம் வகுப்பில் நாந்தான் "ஹீரோ". உங்கள் ஆளு நடிகர் சிவகுமார் இந்த படத்தில் 'சூப்பர்' அல்லது 'சொதப்பிவிட்டார்' என பல்வேறு விமரிசனங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கும்" 

..அன்று ஆரம்பித்ததுதான் இன்றும் எனது மனைவியும் குழந்தைகளும் நடிகர் சிவகுமார் அவர்களின் படமோ பாட்டோ சின்னத்திரையில் வந்தாலேபோதும், என் பக்கம் ஒரு பார்வை பார்க்காமல் இருந்ததில்லை... 
https://youtu.be/X2Ur779LsaE

..அப்படிப்பட்ட திரைப்பட நடிகர் சிவகுமார் அவர்களா?, இன்று மிகபெரிய இலக்கியவாதியாக மேடைகளில் கலக்குகிறார்... அவரின் இலக்கிய பேச்சுக்களை கேட்கும்போது என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை... "நான் அவரின் தீவிர ரசிகன் என்பதில் தற்போதுதான் இன்னும் அதிக பெருமைபடுகிறேன்"

....நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி .

Tuesday, November 18, 2014

...."அந்த தொழிற்ச்சாலையில் மாத சம்பளம் தருவதே மிகவும் கடினமான நிலையில் இருந்தது. இந்த நிலையில்தான் கடன் வழங்கிய நிதி நிறுவனத்தின் நேரடி ஆய்வு அன்று!....."

# என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்;- "ஆடு பாம்பே விளையாடு பாம்பே - அடிபட்ட பாம்பு சார் அது???? ".....

அப்போது Dec-1989, பல மருத்துவமனைக்கு அறுவைசிகிச்சைக்கு பஞ்சு வழங்கும் ஒரு பிரபல பஞ்சு (Cotton MIlls)தொழிற்ச்சாலை அது,  அதன் அதிபரும் என் அப்பாவும் நண்பர்கள் (ஆலையின் அதிபர் அதிகம் படிக்காதவர்- தாத்தாவின் காலம் முதல் வணிக வழியில் குடும்ப நண்பர்) அவரின் பஞ்சு ஆலைக்காக கடன் தந்திருந்த, வங்கிக் கடன் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வர இருப்பதால் உதவுமாறு கேட்டுக்கொண்டார். உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த அப்பாவால், அலைய முடியாமல் இருந்த சமயம் அது, எனக்கு சில அறிவுரைகளை கூறி இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பஞ்சு ஆலைக்கு சென்று உதவும் படி கேட்டுக்கொண்டார்,

கடன் பெற்று அதில் ஓடிக்கொண்டிருந்த பஞ்சு ஆலையில், தயாரித்த பொருட்களும் கடனில் விற்கப்பட்டு, ...."அந்த தொழிற்ச்சாலையில் மாத சம்பளம் தருவதே மிகவும் கடினமான நிலையில் இருந்தது. இந்த நிலையில்தான் கடன் வழங்கிய வாங்கி நிதி நிறுவனத்தின் நேரடி ஆய்வு (Bank Audit) அன்று!....." , அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு வழியாக தயார்செய்தோம்..... முதல்நாள் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி "நான்கு-4" வாட்ட சாட்டமான ஆட்களை "கையில் தடியுடன்", தயாரித்த பொருட்கள் வைக்கும் காலியான இருப்புக் கிடங்கின் (GODOWN) கதவை மூடி அதன் அருகே நிற்க வைத்தோம், ...தொழிற்ச்சாலையின் தயாரிப்புக்கூடத்தின் உள்ளிருந்த  மிகப்பெரிய காலியான தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி, மேற்ப்பரப்பில் செய்தித்தாள்களை பரப்பி, அதன் மீது சிறிதளவே இருந்த பஞ்சுகளை (Cotton) தூவி வைத்தோம். அதாவது தொட்டி நிறைய தயாரிப்பிற்கான பஞ்சு இருப்பில் (RAW COTTON STOCK) உள்ளது என்பதாக காண்பிப்பதற்கு.

குறிப்பிட்ட நேரப்படி இரண்டு வங்கிக்கடன் அதிகாரிகள் வந்தபோது, முதலில் (முன்பே சரி செய்யப்பட்ட) இருப்பு (STOCK-REGISTERS) புத்தகங்களை சோதனை செய்துவிட்டு , கிடங்கிற்கு (GODOWN) சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்றார்கள், அவர்களை அழைத்துக்கொண்டு கிடங்கு (GODOWN) இருக்குமிடம் சென்றோம். ஏற்கனவே பேசிவைத்தபடி பணியாட்கள் கையில் தடியுடன், நன்றாகவே நடித்தார்கள் " சார் கிட்ட வராதீங்க ...மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்றை அடித்துவிட்டோம் மற்றொன்று தப்பித்து கிடங்கினுள் (GODOWN) நுழைந்துவிட்டது, அடிபட்ட பாம்பு சார்..!!!! " என்றார்கள்.... 

அவ்வளவுதான் ஆய்வுக்கு வந்தவர்கள் சற்று பயத்துடன் "GODOWN-கிடங்கின் உள்ளே என்ன பொருள் உள்ளது என்பதை சொன்னாலே போதும், வெளியில் இருந்தே குறித்துக்கொண்டு சென்றுவிடுகிறோம் என்றார்கள்." (பாம்பு என்றால் பயப்படாமல் இருப்பார்களா?) அதன் பிறகு தொழிற்ச்சாலையின் தயாரிப்புக்கூடத்தின் உள்ளிருந்த தொட்டி நிறைய தயாரிப்பதர்க்காக இருப்பு ஏற்ப்படுத்தி வைத்திருந்த "உற்பத்திக்கான பஞ்சு -RAW COTTON"-STOCK இருப்புக்களையும் குறித்துக்கொண்டு, பஞ்சு ஆலை சிறப்பாக செயல்படுகிறது என்று கூறியதோடு, அதிகாரிகளுக்கான தொழிலக பதிவேட்டுப் புத்தகத்தில் விவரங்களை எழுதி கையப்பமிட்டுச் சென்றனர். 

ஒருவழியாக ஏதேதோ செய்து அன்று அந்த பஞ்சு தொழிற்ச்சாலை அதிகாரிகளின் ஆய்வுகளில் தப்பித்துக்கொன்டாலும் பின்னாளில் நேர்ந்த அண்ணன் தம்பி சொத்துத்தகராறு ஒன்றில், ஒரேடியாக மூடுவிழா கண்டது என் மனதிற்கு வருத்தமாக இருந்தது.

"அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே. .." "https://youtu.be/pvp4dwUeUy0"

நன்றிகளுடன் கோகி-என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.


சில/ பல நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில்..

நிர்வாக செலவுகளை குறைக்கும் நோக்கிலும், வளர்ச்சிக்கான புதிய வழிவகைகளை ஊக்குவிக்கும் பொருட்டும் சில/ பல நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், வேலை செய்து சம்பாதிப்பது என்பது நிலைத்தன்மையற்றதாகிவிட்டது. ஆகவே (எதிர்காலச் சந்ததிகளுக்கு) எதிர்வரும் காலத்தில் வேலை செய்து சம்பாதிக்கும் திருமணமாகாத இளையவர்களுக்கு,  திருமண வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகிப் போகும் அவல நிலை உள்ளது. ஆகவே இனி,  மேல்நிலை அல்லது பட்டப் படிப்பை பயிலும் மாணவர்கள் வேலைபார்த்து சம்பாதிக்கும் கல்வியை கற்காமல், சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கும் தொழில்நுட்பக் கல்வியை கற்றுத்தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. 

அப்படிப்பட்ட கல்விகள் எவை எவை? மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பக்கல்வி,  விவசாயம், பொறியியல், கட்டிடக் கட்டுமானம்,  அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி, ஆலோசகர் -பொறியியல் அல்லது வணிகவியல் மேலும் சட்ட ஆலோசகர் போன்ற படிப்புகளை படிப்பவர்கள் பிறரிடம் வேலைபார்த்து சம்பாதிக்காமல், தனது காலில் சுயமாக நின்று தொழில் செய்து சம்பாதிக்கும் திறமையை பெறலாம் அதன்மூலம் சிறப்பான ஒரு எதிர்காலம் அமையுமாறு  திட்டமிட்டு செயல்படும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாமல் வாழமுடியும்.
    
ஆகவே இன்றைய இளைய மாணவர்களே! தொழில்நுட்பக் கல்வி பயில கனவு காணுங்கள், அந்த கனவுகளை நினைவுகளாக மாற்றுங்கள். உங்களின் அனுபவக்கல்வியை சுயதொழிலாக செய்து வருமானம் ஈட்டும் வகையில், நீங்கள் உங்களின் சொந்தக்கால்களில் நிற்க்கப்பழகுங்கள். வாழ்த்துக்களுடன், உங்களோடு உறுதுணையாக  ..(ஆலோசகர்-கோகி.) 

Thursday, November 13, 2014

ஆக்ரோஷமான இரட்டிப்பு வியாபார யுக்தி விருது-2002.

#எனக்குமட்டும் யோசிக்க இன்னும் சிறிது நேரம் தாருங்கள், மேலும் சிறப்பாக செய்யமுடியும் என்றேன் "அதை சரியாக புறிந்துகொள்ளாத நிறுவனத்தின் உரிமையாளர் "வேலையை விட்டுவிட்டு உன் வீட்டிற்கு சென்று உட்கார்ந்து யோசி என்றார்" எனக்கு வந்த கோபத்தை செயலில் காட்டினேன்... அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு புரியும் படி ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 32மணிநேர உற்பத்தியாக்கி(அதாவது ஒவொரு 8 மணி நேரத்தில், 10 மணி நேர உற்பத்தி = 2 மணி நேர கூடுதல் உற்பத்தி 3shift x 8+2 =30Hrs)-லாபத்தை செயலில் செய்து காட்டியபோது அசந்த்துபோனார்கள்" நான் அவர்களிடம் சொன்னது நிறுவனம் எனக்கு சம்பளம் தரவில்லை நான்தான் நிறுவனத்திற்கு தருகிறேன் என்றேன், அதோடு நான்மட்டுமில்லாமல் என்னுடைய குழுவினரும் கூட அப்படித்தான் என்றேன் . "நேரத்தை மிச்சப்படுத்துவதுடன்,  இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்" கோகி....  “Received an Award -Double the volume of Business-2002”  ஆக்ரோஷமான இரட்டிப்பு வியாபார  யுக்தி விருது-2002 கோகி....

காக்கா பாட்டியிடமிருந்து வடையை திருடவில்லை....!!!!

காக்கா பாட்டியிடமிருந்து வடையை திருடவில்லை. பாட்டிதான் தினமும் தனது வடை வியாபாரத்தின் முதல் வடையை காக்கைக்கு வைப்பது வழக்கம். ஆகவே அந்த கதையில் திருட்டு என்பது இல்லை ஆனால் தந்திர நரிதான் ஏமாற்றுகிறது என்றும்....எனவே ஏமாறுவதுதான் தவறு என்று கதை கருத்து கூறுகிறது...... 

பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியும் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

ஊருக்கு வெளியே கடையிருக்கு
கடையில வெங்காய வடையிருக்கு
கடையில வடைய திருடிக்கிச்சாம்
காக்கா மரத்திலே குந்திக்கிச்சாம்

காக்கா மூக்கில வடையிருக்க
குள்ள நரியுமே பாத்திடுச்சாம்
லேசா வடையை வாங்கிடவே
நரியொரு தந்திரம் பண்ணிக்கிச்சாம்

காக்கா பாட்டு பாடச்சொல்லி
குள்ள நரியுமே கேட்டுக்கிச்சாம்
வாய திறந்து காக்காபாட
வடையும் கீழே விழுந்திடுச்சாம்

விழுந்தத நரியும் கௌவிக்கிச்சாம்
வாயில போட்டுத் தின்னுடிச்சாம்

பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியும் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !..வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூ...ர...மோ.... அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !
 நன்றி .... நட்புடன் கோகி

அது 2004 பிப்ரவரி மாதம் எனது மகள்,மகன் இருவரும்.....

அது 2004 பிப்ரவரி மாதம் எனது மகள்,மகன் இருவரும் ஒரே மாதத்தில் பிறந்தநாள் வரும், 4நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள் (24 & 28 பிப்)ஆகவே இருவருக்கும் சேர்ந்து ஒரே நாளில் (24 அல்லது 28 இல் ) பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பது வழக்கம். இரண்டு வாரத்திற்கு முன்பிருந்தே அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நான் என் மகன் மற்றும் மகளிடம் உங்களுக்கு பரிசுப்பொருட்கள் வருவது மகிழ்ச்சிதானே, என்று கேட்க அவர்களிருவரும் ஆமாம் என்றார்கள்.  இந்த வருடம் அதை சற்று மாற்றி பரிசுப்பொருட்களை நீங்கள் மற்றவருக்கு வழங்கினால் எப்படி   இருக்கும்? என்று கூற... நன்றாக இருக்கிறதே என்ன செய்யலாம் என்று இருவரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்..., இடையில் புகுந்த நான் நிறைய பேனா பென்சில் நோட்டு புத்தகம் போன்ற பொருட்களை வாங்கி எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரசு ஆரம்ப பள்ளிக்கு சென்று ஏழை மாணவ மாணவியருக்கு அந்த பொருட்களை வழங்கினால் எப்படி என்று கேட்க, அதுவே சரி என்று முடிவானது. எனது மகளும் மகனும் அன்றிலிருந்தே சிறுக சிறுக பொருட்களை வாங்கி சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள், 


அருகே இருந்த பள்ளியைப்பற்றி விசாரித்தபோது 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் படிப்பதாக தெரிந்தது, எங்கே நம்முடைய பரிசுப்பொருட்கள் மிகவும் குறைவாக போதுமான அளவில் இருக்காதோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது நண்பர்களிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன். 



சரியாக இரண்டு நாட்கள் இருந்தபோது ஒரு லாரி நிறைய பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களுடன் புத்தகப்பை உட்பட வீட்டின் முன்பு வந்திறங்கியதைப் பார்த்ததும் எங்கள் அனைவருக்கும் ஆச்சிரியமாகிவிட்டது. இரண்டு முன்னணி வர்த்தக நிறுவனத்திலிருந்து வந்திருந்த அந்த பரிசுப் பொருட்களுடன் ஒரு கடிதமும் இருந்தது. அந்தக்கடிதத்தில் உங்கள் குழந்தைகள் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட வகுத்த திட்டங்கள் எங்களின் நிறுவனத்தை மிகவும் கவர்ந்தது, ஆவகே எங்களின் நிறுவனம் அவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு, அவர்கள் செய்யும் சேவையில் இந்த பரிசுப்பொருட்களையும் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது. அதற்க்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டு நிறுவனம் என்பது மாறி 4,5 என நிறுவனக்கள் போட்டி போட்டுக்கொண்டு அவகளின் விளம்பரத்திர்க்காகவும் பரிசுகளை குவிக்கத்தொடகினார்கள்..... எது எப்படியோ சிறு துளி பேரு வெள்ளம் போல ஒரு சிறிய எண்ணம் மிகப்பிரிய வரவேற்ப்பை பெற்றதோடு ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படுமாறு அமைந்தது மகிழ்ச்சியான ஒன்று. இப்படிக்கு, நன்றிகளுடன்  கோகி.   

காதல் பெருங்காயத்தை காகிதத்தில் மூடி மறைக்க முடியாது ???

# காதல் பெருங்காயத்தை காகிதத்தில்  மூடி மறைக்க முடியாது !!!

# மனதில் ஏற்ப்பட்ட ஊமைக்காயம்- எப்போதும் 'கூட்டுப் -பெருங்காயம்' போல காட்டிக்கொடுக்காது .....

# பெருங்கயத்தை "கத்தரிக்காய்" கக்கிவிடும்.

# பெருங்காயம் வாயுத்தொல்லையை நீக்கிவிடும்

# பெருங்கயமும் தயிரும் ருசியை தூக்கிவிடும்.

# பெருங்காயம் வாய் துர்நாற்றத்தைப் போக்கிவிடும்.

"“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” . http://youtu.be/HS_O1JkstfU

அப்போ எனக்கு 12 வயது (1976)

அப்போ எனக்கு 12 வயது (1976), பள்ளியில் சாரண சாரணியர் பிரிவில் சேர அப்பாவிடம் அடம்பிடித்து மறுநாளே அதற்க்கான உடைகள், மற்றும் (SHOES-ஷூ-பாத உறை கவச அணி- அகராதியில் தேடி கண்டுபிடித்தது) போன்றவைகள் அணிந்துகொண்டு பள்ளிக்கு சென்று ஒரு கலக்கு கலக்கியது ஞபகம்..... அதற்க்கு "போர்டர் கந்தன்" திரைப்படமும் பார்த்ததும் ஒரு முக்கியக்காரணம்."நல்ல நல்ல சேவை நாட்டுக்கு தேவை நாம் இதை நாடுதல் நன்றே"http://youtu.be/D4sb1X2EqGQ


பள்ளி மாணவனாக இருந்தபோது "போர்டர் கந்தன்" திரைப்படம் பார்த்தது மனதில் வேறுஒரு இனம்புரியா வருத்தத்தையும் தந்தது, இந்த பாடலில் வரும் காட்சிகளை அப்போதைய "சென்னை மூர் மார்கெட்" நான் அடிக்கடி பழைய புத்தகங்கள் வாங்க அப்பாவுடன் செல்லும் வழக்கமான பகுதியில் இரவு நேரங்களில் நான் நேரில் பார்த்த காட்சிகள் தான் இந்த பாடலில் பார்த்ததாக ஞபகம், அந்தக்கால "மூர் மார்கெட்" பகுதி தற்போது சென்னை சென்ட்ரல் புறநகர் இரயில் நிலையமாக உள்ளது.http://youtu.be/FS_Fs5PXRCo

நிலநடுக்கங்கள் காரணமாக "புவியின் மேற்ப்பரப்பில் அமைந்துள்ள பாரைத்தட்டுகள் நகர்கின்றன!!!!!!

தினமலர் செய்தி 11-11-2014. "அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.7 என்ற அளவில் இருந்த இந்த நிலநடுக்கத்தின் மையம் அந்தமான் கடலில் இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் இல்லை"  நான்  தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆசியாவின் பல்வேறு பகுதியில் ஏற்ப்படும் நிலநடுக்கங்களை பதிவு செய்து ஆராய்ந்து வருகிறேன். இன்னும் 2 அல்லது 4 வாரங்களுக்குள் இந்தியாவின் வடபகுதி அல்லது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு  சென்ற ஆண்டு (ஏப்பரல் 2013) நான் எனது இனைய பக்கத்தில் குறிப்பிட்டிருந்த ஒன்றை திரும்பவும் இப்போது பதிவு செய்கிறேன்....... ....நிலநடுக்கங்கள் காரணமாக "புவியின் மேற்ப்பரப்பில் அமைந்துள்ள பாரைத்தட்டுகள் நகர்கின்றன என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது".  சென்ற இரண்டு வாரங்களாக உலகின் பல பகுதிகளில் நடந்த பூமி அதிர்வுகள் மேலும் அதை உறுதிபடுத்தும்படி அமைந்துள்ளது. ஆசிய கண்டத்தின் பூமத்தியரேகைக்கு மேற்பகுதி மற்றும் கீழ் பகுதி என பல பாறை அடுக்குகளால் ஆனது என்றும், இதில் எந்த ஒரு பாறை தட்டும் நகரும்போது அதனால் ஏற்ப்படும் இடைவெளியை மற்றொரு பாறை தட்டு நகர்ந்து சரிசெய்யும் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் நில அதிர்வு உணரப்பட்டதும் அடுத்த சில வாரங்களில் ஆசிய பாறைத் தட்டுகளின் கிழக்கு பகுதியான இந்தோனேசியா அல்லது மேற்கு முனையான ஆப்கனிஸ்தான் மற்றும் வளைகுடா பாரைத்தட்டுகள் பகுதியில் எதிரொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, நேற்றைய ஈரான் பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட கடுமையான நில அதிர்வும் இன்று விடியற்காலையில் ஏற்ப்பட்ட இந்தோனேசியா நில அதிர்வும் அதை உறுதிப்படுத்தின. இப்படிக்கு கோகி  

Friday, November 7, 2014

எனக்கு பிடித்த ஒரு சின்ன கற்பனை.....

ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.
பரிசு என்னவென்றால் -
ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.
3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.
இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்
இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?
உண்மையில் இது ஆட்டமில்லை 

- நிதர்சனமான உண்மை

ஆம்

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை. அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம். 
ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் 
போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 
86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை. அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான். நேற்றைய பொழுது போனது போனது தான். ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள். எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா? 
இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் 
ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க 
மாட்டோமா?
காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும். 
எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் 
சந்தோஷமாக இருங்கள்
சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்...... 

வாய்ப்புகள் மட்டுமே வாழ்க்கையை வளமாக்குவதில்லை,

வாய்ப்புகள் மட்டுமே வாழ்க்கையை வளமாக்குவதில்லை, அதற்க்கேற்ப்ப மாறத்தயாராக இருந்தால் மட்டுமே,.......அப்போதும்  வாய்ப்புகள்- வளமான வாழ்க்கைக்குரிய வழியைமட்டுமே காட்டும். http://youtu.be/uyNrqgjBaQQ

" வெளிநாட்டு மதங்கள எவ்வள்வு தொகை கொடுத்தாலும் மாறத்தயாராக இல்லை!!! " http://youtu.be/OiAD_5iGSOA
ஏட்டில் எழுதிவைத்தேன் எழுதியதை சொல்லிவைத்தேன்- "உலகளவில், பல எழுத்தாளர்களின் நிலை இன்னமும் வறுமைக்கோட்டின் கீழ்தான் உள்ளது - தினகரன் வசந்தம்"  

வாசகர்கள் அதிகரித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்..... வாழ்க வாசகர் மன்றங்கள், வாசகர் வட்டங்கள், வாசகர் பேரவைகள் ....http://youtu.be/arPkgsUyjR0 

"எனது மே- தின வானொலி தொகுப்பிலிருந்து ஒரு பகுதி"

"எனது மே- தின வானொலி தொகுப்பிலிருந்து ஒரு பகுதி" ஹெர்குலஸ்  என்பவர், கிரேக்க கதைகளில் வரும்,நம்ம ஊர் பீமன் மாதிரி. மிகுந்த பலசாலி. இவர் ஒரு முறை உலகத்தின் கோடிக்கு யாத்திரை செல்கிறார்.அப்போது அட்லஸ் என்பவர் தான், உலகத்தை தன் தோளில் சுமந்து கொண்டிருந்ததாய் புராணம். ரொம்ப நாளா தூக்கி வச்சிருந்ததாலே,அவருக்கு தோள் நோவு கண்டுடுச்சு. இந்த சுமையை தூக்க கூடிய ஆள் யாரும், அந்த நாளிலே இல்லை. ஹெர்குலசை பார்த்தவுடன், அட்லஸ் ரொம்ப சந்தோஷப் பட்டார்.கிட்ட வந்தவுடன் "அப்பா என் சுமையை கொஞ்சம் தாங்கிக்கோ", இயற்கை உபாதையை முடிச்சிட்டு வர்றேன்னார். ஹெர்குலஸ் உலகத்தை தூக்கிக் கொள்ள அட்லஸ் "ஜூட்", விட்டார். அட்லாசின் நோக்கம் விளங்கிக் கொண்ட ஹெர்குலஸ், "அண்ணே, ஒரு நிமிடம், "இங்கே வாங்க" அப்படின்னு கூப்பிட்டார். "என்ன ?" என்று, எட்டியே நின்று கேட்ட அட்லாசிடம், "முண்டாசை சரியாகக் கட்டிகிட்டேன்னா, எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் என்னாலே தூக்க முடியும், நீங்க பொறுமையா திரும்பி வரலாம்", இன்னு சொல்ல, அட்லசும் உடனே, உலகத்தை மீண்டும் தோளில் சுமக்க. ஹெர்குலஸ் "எஸ்கேப்", ஆயிட்டார்.

எதுக்கு இந்த கதையின்னா "உலகத்தில் யாரும் சுமையை தூக்க விரும்பறதில்லே. எப்போடா இறக்கி வைப்போம்", என்பது தான் யதார்த்தம். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கோ, முதலாளிக்கோ வேலைப் பளுக்கள், நிறைய பொறுப்புகள். இந்த பொறுப்புகளை எடுத்துக் கொள்ள, நாம் தயாரானால், குறிப்பு அறிந்து முன் கூட்டியே செயல்பட்டால்,உங்கள் முன்னேற்றத்தின் எல்லாப் படிகளிலும் உறு துணையாய் இருப்பார்", ஆகவே சுமை தாங்கியாக நீங்கள் ஒருவருடைய பளுவை பகிர்ந்தால்,அவர் மற்ற வேலைகளை முடிக்க, அவருக்கு அவகாசம் கிடைக்கும் அதன்மூலம் நீங்களும் பயன்பெறலாம். அதோடு 
"நாணயம், நம்பிக்கை இரண்டையும் பயன் படுத்தி இன்னமும் முன்னேறலாம்", "சுமைதாங்கி சாய்ந்தால்..."  http://youtu.be/NqIwYf-gbV8

நீ ஆஸ்திகனா? அல்லது நாஸ்திகனா?

நீ ஆஸ்திகனா? அல்லது நாஸ்திகனா? என்று கேட்டால், என்ன சொல்வது?  "கடவுள் என்ற ஒன்றை நாம் நம் அனுபவத்தில் உணர்கிறோமோ  அல்லது நேரடியாக உணர்கிறோமோ அன்றுதானே நாம் உண்மையில் நம்மை ஆஸ்திகர் என்று சொல்லிக்கொள்ள முடியும். அதுவரையில் நாத்திகம்தானே" சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதானே உண்மை. 

"திருநின்றவூரில் சிவ பக்தர் "பூசலார் நாயனார்". 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் கி.பி. 7–ம் நூற்றாண்டில் ஈசனுக்கு தன் இருதயத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ததுபற்றிய, பல்லவ மன்னன் ராச நரசிம்மர் காலத்து குறிப்புகள் நினைவிற்கு  வருகிறது" 

சந்திராஷ்டம தோஷம் நீங்க வேண்டுமானால் சங்கடஹர சதுர்த்தி அன்று .....

நம்பிக்கை துரோகம், மற்றும், ஜீவராசிகளுக்கும்,மனித நேயத்திற்கும் தீங்கு விளைவிப்பவர்கள் அவர்களின் அடுத்த பிறவியின் ஜனன ஜாதகத்தில் சந்திராஷ்டம தோஷம் இருக்கும் ( அதாலால் அவர்களின் பிறந்த நட்சத்திரப்படி சந்திராஷ்டம  நாட்களில் படாத பாடு படும்படி நேரும்) சந்திராஷ்டம தோஷம் நீங்க வேண்டுமானால் சங்கடஹர சதுர்த்தி அன்று ஸ்ரீ கணேஷ்- பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகச்சிறந்த வழியாகும். ஸ்ரீ கணேஷ் என்றாலே சந்திரனுக்கு பயமாம், ஆகவே அவரின் பெயரைக்கேட்டமாத்திரத்திலேயே மறைந்துகொண்டு தலை மறைவாக இருப்பாராம். அறிவியல் முறைப்படி  சூரியனிலிருந்து சந்திரன் விலகிநிற்கும் எட்டாம் ராசிமானத்தில் (216*-228*) பாகை அளவில்தான் சங்கடஹர சதுர்த்தி வரும்.  இந்த காலம் சந்திராஷ்டமன காலத்தின் முடுவு காலமாகும். இந்த  பாகைக்குப்பின் சந்திரன் தேய் பிறையாகவும் மறைவு நிலையிலும் இருக்கும்.  

உத்தி + யோகம் = உத்யோகம். [Strategy + Yogam =Profession....The Yogam is not Luck and it is your Performance]

குறிப்பு :- இது நான் எழுதிய, எனது வானொலி நிகழ்ச்சியிலிருந்து ஒரு பகுதி "உத்தி  + யோகம் = உத்யோகம்". ["Strategy + Yogam =Profession"....The Yogam is not Luck and it is your Performance]   (தூய தமிழில் "புரிந்துணர்வு செயல்திறன் + கைவசமாவது") இங்கு யோகம் என்பது அதிர்ஷ்டம் அல்ல அது "கர்ம வினை" அல்லது, சாமர்த்தியம் அல்லது, சாதுர்யம்.... அதாவது சாமர்த்தியமாக சம்பாதிப்பது..... அட கர்மமே !!! என கூறுவது,.. அட யோகமே!! என்பதுதான் சரியான பொருள் ... கர்மம் என்றால் செய்யும் செயல்கள்... நாம் செய்யும் செயல்கள்தான் யோகமாக நம்மை வந்தடைகிறது அது நல்ல யோகமா அல்லது கேட்ட யோகமா என்பது நாம் செய்யும் செயல்களைப்பொருத்து அமைகிறது. 

" நீ எதை தூக்கியெரிகிராயொ  அது திரும்ப உன்னிடம் வந்தடையும் - மகாபாரதம்" 

ஒரு தந்தையும் அவனது பத்து வயது மகனும் காட்டுப் பாதை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தனர்.
மகனுக்குத் திடீரெனக் காலில் ஏதோ குத்தியது. வலி பொறுக்க முடியாமல் "ஆ" என்று கத்தினான். காட்டிலிருந்து இன்னொரு "ஆ" என்று திரும்பக் கத்தியது. கோபங்கொண்ட அவன் "நீ யார்?" என்று குரல் கொடுத்தான். "நீ யார்?" சுவரில் எறிந்த பந்தாக அது திருப்பி வந்தது. "நீ ஒரு முட்டாள்" என்றான். அதே வாசகம் திரும்ப வந்தது.
வருத்தமுற்ற அவன் தந்தையிடம் கேட்டான். "இங்கே என்ன நடக்கிறது அப்பா?"
"பேசாமல் என்னைக் கவனி பின்பு புரியும்" என்று மெதுவாகச் சொன்ன தந்தை
"நீ ரொம்ப நல்லவன்" நன்றாகக் கத்தியபடி சொன்னார்.
"நீ ரொம்ப நல்லவன்" எனப் பதில் வந்தது.
"நீ அழகாக இருக்கிறாய்" அதே வார்த்தைகள் திரும்பக் கிடைத்தன.
தந்தை மெதுவான குரலில் அவனிடம் பேச ஆரம்பித்தார்.
"உலகில் எல்லோரும் இதை எதிரொலி எனக் கூறுவார்கள். ஆனால் நான் சொல்வேன், இது தான் வாழ்க்கை என்று."
"வாழ்வின் உண்மையான தத்துவம் என்ன என்பது உனக்குச் சொல்லட்டுமா?" என்றவர் தொடர்ந்தார்.
"நீ எதைக் கொடுக்கிறாயோ அதுவே உனக்குத் திரும்பக் கிடைக்கும். மதிப்பைக் கொடு. மதிப்பு திரும்பக் கிடைக்கும். நன்கு புரிதலைக் கொடு, அது அப்படியே கிடைக்கும். "மாறாக வெறுப்பை உமிழ்ந்தால் வெறுப்பு உனக்குத் திரும்ப வரும். கசப்பைக் காட்டினால் அதுவே உன்னை வந்தடையும்."
எனவே எதை அடுத்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறாயோ அதையே அடுத்தவர்களுக்குக் கொடு. அது உனக்கு அப்படியே கிடைக்கும். நல்லதையே கொடு அல்லாததை ஒரு போதும் அளிக்காதே" என்றார்.
"நன்றி அப்பா! நல்ல பாடத்தைக் கற்றேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.
"ஆ ஜாலி" என்று கத்தினான். "ஆ ஜாலி" என்றது குரல்.
நமது வாழ்வு என்பது தற்செயலாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல. அது நமது செய்கைகளின் அப்பட்டமான பிரதிபலிப்பு.
நாம் எதைக் கொடுக்கிறோமோ அதுவே நம்மை வந்து அடையும். நமது வாழ்வின் ஒவ்வொரு கோணத்திலும் இது பொருந்தும்.
அதுவே வாழ்வின் தத்துவம். ....நன்றிகளுடன் கோகி. 

அன்னையர்த்தினத்தன்று எனது சர்வதேச பண்பலை மற்றும் இனைய வழி வானொலி நிகழ்ச்சி ஒன்றை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.


எனது நிகழ்ச்சி தயாரிப்பில் பல மேடை நிகழ்சிகள் மற்றும் பொது கண்காட்சி நிகழ்சிகள் (சர்வதேச கண்காட்சி நிகழ்சிகளும்), கல்வி நிகழ்சிகள், பொதுக்கூட்ட நிகழ்சிகள் மற்றும் கோவில் -சமய அறநிலையத்துறை நிகழ்சிகள் என பல்வேறு நிகழ்சிகள் செய்திருந்தாலும் சர்வதேச வானொலிக்காக செய்த சில  சிறு சிறு  நிகழ்சிகள் பல மனதிற்கு மகிழ்ச்சிதருவதாக இருந்தது, உதாரணமாக எனது வானொலி நிகழ்ச்சிகளிலிருந்து ஒரு சில பகுதிகளை இங்கு பகிர்ந்துள்ளேன்.

பொதுவாக சிறு சிறு நிகழ்சிகள் என்றால் அன்னையர்தினம், உழைப்பாளர் தினம்(மேதினம்), மற்றும் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் இதுபோன்ற பண்டிகை தின குறிப்புக்களுடன் அது சம்பந்தப்பட்ட  பாடல்களின் தொகுப்புகளை, ஒரு அரைமணிநேர அல்லது ஒருமணிநேர விளம்பரதாரர் நிகழ்சிகளாக தொகுத்து தருவதாகும்.... உதரனத்திற்க்கு (சிங்கை, மலேசிய, லண்டன், கனடா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா  போன்ற 7-சர்வதேச வெவ்வேறு சர்வதேச பண்பலை மற்றும் இனைய வழி வானொலியிலும் ஒளிபரப்பப்பட்ட)  எனது அன்னையர் தின நிகழ்ச்சி ஒன்றை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.  


நன்றியுரை:- திரு பொன் சிவா வரதராஜன் அவர்கள்13-05-2012அன்று  வாசித்து வழங்கிய  எனது நிகழ்ச்சித்தொகுப்பான அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி, மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ் வொரு வரியையும் மிகத்தெளிவாக வாசித்து வழங்கிய விதம் மிகவும் அருமை. உலக தமிழ் நேயர்கள் அவர்களது தாய்க்கு அவர்களே வழங்கிய நிகழ்ச்சியை போல் இருந்தது.  எனது இந்த நிகிழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும்போது நான் மலேசியாவில் என்னுடைய நண்பர்களுடன் கேட்டு மகிழ்தோம், கனடாவின்-A9 வானொலிக்கு இப்போது மேலும் நிறைய மலேசியா ரசிகர்கள் விரும்பி கேட்டுக்கொண்டிருக்கிரர்கள். என்னுடைய இந்த நிகழ்ச்சியை வழங்கிய  கனடாவின் A9 சர்வதேச தமிழ் வானொலி நிலையத்திற்கும்  எனது நன்றிகளுடன் சிங்கை-கோகி. 

(குறிப்பு:-அன்னையர்த்தினத்தன்று எனது இதே நிகழ்ச்சி சிறிது மாறுபட்ட வடிவில், மேலும் 7 சர்வதேச பண்பலை மற்றும் இனைய வழி வானொலியிலும் ஒளிபரப்பானது . )
இந்த நிகழ்ச்சியை இணையதளத்தில் WWW.A9RADIO.COM  எப்போதுவேண்டுமானாலும்,  இனைய முகவரியை சொடுக்கி கேட்குமாறு  இணைக்கப்பட்டுள்ளது.

13-05-2012-அன்னையர் தின சிறப்பு நிகிழ்ச்சி -WWW.A9RADIO.COM 
உலகிலே புனிதமான பாசம் தனது தாயின் பாசம்!
தாய் – நமது ஆரம்பம், அவ்வை- தமிழின் ஆரம்பம், சரஸ்வதி – இசையின் ஆரம்பம் என மகளிர் சக்தி எங்கும் எதிலும் உண்டு. ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்று உரைச்சொல்லும் உண்டு. இச்சக்திகள் ஒன்றிணைந்து முன்னே வந்தால் வெற்றி, மிகப் பெரும் வெற்றியாக மாறும்.
I LOVE YOU AMMA...GOD PLEASE GIVE LONG LIFE TO AMMA.... TO LIVE MORE AND MORE 100 YEARS....
கருவில் தாங்கி உருவினில் உயிர் பெற உழைத்தவள் அம்மா, உயிர் எழுத்தின் உண்மை பெயர் அம்மா, பிரியாமல் இருப்பதற்காய் பிரிவை வரமாய் கேட்கிறேன்... பிரிவால் கூட முடியாதம்மா என்னிடம் இருந்து உன்னை பிரிப்பதற்கு....
பாசம் மிகுந்த ரசிக நெஞ்சங்களே ..அன்னையர் தினம்னா ஒருநாள் மட்டும் தானான்னு... கேட்டீர்கள் என்றால், இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன்... இருந்தும் அம்மாவுக்கு இப்படி ஒரு மகிழ்ச்சியான, எதிர்பாரத, இன்ப அதிர்ச்சி தரும் கொன்ன்டாட்டமான நாளை அன்பளிப்பாக தந்தாள் அது இப்படித்தான் இருக்கும்...(முக்கியமாக ஒரு விவரம் தெரிந்துகொள்ளவேண்டும் திடீர் என்று அம்மாவுக்கு பரிசு தந்தாள் அது வேறுவிதமாக மாரிவிட்டக்கூடும் "மகனே நீ என்னிடம் எதாவது எதிர்பார்கிறாயா " என அம்மா நம்மை கேட்க நேரிடும் ஆகவேதான் எதிர்பாரத, இன்ப அதிர்ச்சி தரும் கொன்ன்டாட்டமான நாளை அன்பளிப்பாக தரலாம்...... XXXXXXXXX) 

இந்தநாள் தாய்க்குலத்திற்கு மற்றுமல்லாது நமக்கும் மகிழ்ச்சியான நாள்தானே ...இந்த படத்திலும் அப்படியே ...எதிர்பார்போடு இருந்த அம்மாவுக்கு எதிர்பாராமல் தந்த பரிசு எப்படி இருக்கும்.... வாங்க இந்த படத்தின் பாட்டை கேட்டாலே புரியும்...இப்ப இந்த பாட்டை கேட்போமா #Neeye Neeye song - M Kumaran S/O Mahalakshmi , நீயே நீயே, நானே நீயே ... நெஞ்சம் பாடும் வுயர் தீயே தீயே.

அம்மா பாட்டு என்றாலே MGR, SHIVAJI, RAJINI, KAMAL பாட்டுதான், முதலில் நமக்கு ஞபகம் வரும் ..சூப்பர் STAR அவர்களுக்கு அமைந்த அம்மா பாடல்களில் இது தான் டாப், அதோடு இசை ஞானி இளையராஜா அவர்களுக்கும் அம்மாவுக்காக பாடிய பாடலில் இதுதான் டாப், இந்த பாட்டை கேட்டால் நாம் மேழுகுவத்திபோல உருகி போய்விடுவோம்...(இந்த பாடலில் இளையராஜா அவர்களும், KJ யேசுதாஸ் அவர்களும் கூட அன்னையின் பாசத்தில் உருக உருக இசைத்து பாடிய ஒரு சாதனை பாடல் இது. வாங்க நாமும் அவர்களுடன் மெழுகுவர்த்தியாக உருகி இந்த பாடலை கேட்போமா ?
#அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே Amma Endru Azhaikadha Movie - Mannan
Music Director - இளையராஜா, Director - P வாசு, Singer - KJ யேசுதாஸ் ...


இதுவும் சூப்பர் ஸ்டார் அம்மாவுக்காக உருக்கமான பாடல் #SUPER STAR RAJINI'S Amma Amma Enthan Aaruyire, அம்மா, அம்மா, என் ஆருயிரே .....

அட நம்ம பத்மஸ்ரீ கமலஹாசன் எப்பிடின்னு பார்கலாமா ..அவரு குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அம்மா பாட்டைத்தான் பாடி "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே.. அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயேநு தனது திரை உலகத்தில் காலடி எடுத்துவைத்தார், அவருக்காக அமைந்த அம்மா பாடல்களில் இது தான் டாப்.. வாங்க பாடலை கேட்போம்
#கமலின் அம்மா பாட்டு :- SONG:- NANAGA NANILLAI THAYE(படம் THUNGATHEY தம்பி THUNGATHEY) நானாக நான் இல்லை தாயே நல்வாழ்க்கை தந்தாயே நீயே.

#மக்கள்திலகம் எம் ஜி ராமச்சந்திரன் MGR-.... அப்பப்பா ...அம்மா என்கிற தாய்க்குலத்திர்க்காக இவருக்கு அமைந்த பாடல்களுக்கு கணக்கே இல்லை...எராளமான பாடல்கள் ..."தாய் மேல் ஆணை தமிழ்மேல் ஆனைன்னு ஆரம்பித்தால் ....எராளமான அம்மா பாடல்கள்... இவருக்கு அம்மான்னா உயிர்,... அப்படி ஓர் "அம்மா பாசம்". அவ்வளவு ஏன் இவர் ஓர் அம்மா பயித்தியம்னுகூட சொல்லலாம், இவர் பார்வையில் தாய்குலம் அனைவரும் "அன்னையின் உருவம்"... அம்மா பிள்ளையான MRG... அவருக்கு இணை அவரே... இப்ப அவரின் தாய்ப்பாசத்தில் அவருக்கு அமைந்த பாடல்களில் இது தான் சூப்பர் ஹிட் டாப் 1-முதல் இடம் ...என்ன பாடல் அது ....
#தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறப்பதில்லை எனக்கொருதாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள் -TMS அவர்களின் குரலில் என்ன இனிமையான பாடல் ...(ஜீவா நதியாய் வருவாள், என் தாகம் தீர்த்து மகிழ்வாள் ..தவறினை பொறுப்பாள் தர்மத்தை வளர்ப்பால், தரணியிலே வளம் சேர்த்திடுவாள்- அந்த தாய் இல்லாமல் நான் இல்லை) (ஆதி அந்தமும் அவள்தான், நமை ஆளும் நீதியும் அவள்தான், அகந்தையை அழிப்பாள் ...ஆற்றலை கொடுப்பாள் , அவள்தான் அன்னை மகாசக்தி -அந்த தாய் இல்லாமல் நான் இல்லை ...)
#அடுத்த அம்மாவுக்கான MGR அவர்களின் வெற்றிப்பாட்டு இது, படம் -தேடிவந்த மாப்பிள்ளை :- பாடல் :-வெற்றிமீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும் (தாயே )
#அடுத்தது இந்த பாடலில் MGR அவர்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள், என்று பாடி நம்முடைய தேசப்பற்றை ஒரு தாய்க்கு சமமாக அந்த தேசத் தாய்மைக்கு மிக உயர்ந்த நிலையான "இமயமலையின் உச்சிக்கு உயர்த்தி" பாடும்படி அமைந்த பாடல் இது .. வாங்க நமது தேசத் தாய்க்காக ஒரு பாடல் கேட்போம் .
# ஒருதாய் மக்கள் நாம் என்போம் ..ஒன்றே எங்கள் குலம் என்போம்.. Oru Thai Makkal from the 1963 movie "Ananda Jothi" starring MGR / M.G. Ramachandran, Devika, M.R. Radha, S.A. Asokan, S.V. Sahasranamam, P.S. Veerappa, Manorama, Master Kamal Haasan & Javar Sitaraman.
அப்பாவும் பிள்ளையும் (மக்கள்திலகம் சிவாஜிகணேசன் , இளையதிலகம் பிரபு ) இருவருக்கும் அமைந்த அம்மா பாட்டு, அந்த வரிசையில் மக்கள்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு அமைந்த அம்மா பாட்டு.. எண்ணி பார்க்கமுடியாத பாடல்கள் உள்ளது அதில் இதுதான் மிகவும் உயர்ந்த ஒன்று. இந்த பாடலை கேட்டாலே அன்னையை விட்டு விலகி இருப்பவர் அனைவரும் ஓடி சென்று அன்னையின் காலில் விழுந்து ..அன்னையை ஆசையாக அரவணைத்து இருப்பர் .. "One of the greatest songs dedicated to mothers worldwide.என்ன பாட்டு அது வாங்க கேட்போம்
#அன்னையை போலொரு தெய்வமில்லை அவள் அடி தொழமறுப்பவர் மனிதரில்லை,மண்ணில் மனிதரில்லை!!
அப்பாவைவிட பிள்ளை ஒரு படி மேலே என மக்கள்திலகம் சிவாஜிகணேசன் பிள்ளை இளைய திலகம் பிரபு அவர்களுக்கு அமைந்த அம்மா பாட்டு இது வாங்க பட்டை கேட்போம் :-
#AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU -அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்! எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேக்கிற பாக்கியம்!
#SOLLI SOLLI VANTHATHILLAI(SENTHAMIL PAATTU)PRABU -
இசை புயல் AR ரகுமான் மற்றும் வைரமுத்து அவர்களும் இந்த பாடலில் தாய்க்காக உருகி உருகி பாடலை அமைத்திருக்கும் விதத்திலிருந்தே அவர்களுக்கு தாய்மேல் உள்ள பாசம் நன்கு தெரியும்... இந்த பாடலை கேளுங்களேன் மனம் இலகிப்போகும்.Song உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே… உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே.....! [உன்னிகிருஷ்ணன் அவர்களின் இனிமையான குரலில் உயிரும் நீயே என்ற அம்மாப் பாடல் ] - Movi-Pavithra, Singer: Unni Krishnan, Music: AR ரஹ்மான்.
#காதல் மன்னன் ஜெமினிகணேசன் அவர்கள் நடித்த படத்தில் (கணவனே கண் கண்ட தெய்வம் ) கண்டசாலாவின் அருமையான அம்மா பாடல் இது( "அம்மா நீ கலங்காதே" ..நீ அல்லவோ பெண் தெய்வம் ..பாரத நாட்டிற்கு பெருமை அளித்திடும் அணிகலன் பெண்குலம் )
# நடிகர் சிவகுமார் மற்றும் நடிகை சுஜாதா அவர்களுக்கு அமைந்த பாடல் :- தாலாட்டு மாறிப்போனதே...என் கண்ணில் தூக்கம் போனதே பெண்பூவே வந்தாடு :- S.Janaki-Isai-Ilayaraja-Movi "UNNAI NAAN SANTHITHEN"
#நடிகர் சூர்யா அவருக்கு அமைந்த அம்மா பாட்டு "காலையில் தினமும் கண் விழித்தெழுந்தால் அம்மா -உன்னிக்ருஷ்ணன் குரலில் நியூ பட பாடல் இது ...அடுத்து "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா ?"
# இந்த பாடல் கொஞ்சம் கவனித்து கேட்டீர்கள் என்றால் (இது ஒரு தாய்க்கு மகன்/மகள் பாடுவதுபோலவும் .. ஒரு தாய், மகள் /மகனுக்காக பாடுவதுபோலவும் இருக்கும் )
#Nenjil Jil - Kannathil Muthamittal ... ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
#இந்த பாடல் ஒரு டிஸ்கோ பாடல் அதுவும் அம்மாக்காக ஒரு டிஸ்கோ பாடல் :-song:- அன்னை என்னும் ஆலயம் , அன்பில் வந்த காவியம், கண்ணில் வந்த ஓவியம் -Movi-Aboorva Sagotharigal- by Janaki Music-Bappilahari.
#இப்ப நாம நம்ம தமிழ் தாய் கடவுளுக்கு ஒரு பாட்டு கேட்கலாமா
ஆத்தி சூடி தந்த அவ்வை சொல்லியது அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்
பால்... தமிழ் பால் , என்னும் நினைப்பால் , இதழ் துடிப்பால், அதன் பிடிப்பாள் , சுவை அறிந்தென்........அதுவல்லவோ நமக்கு தாய்ப்பால் ..முதன் முதலில் நமக்கு உட்டிய தமிழ் பால் அல்லவா அது
#அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை (டீச்சரம்மா படத்தில் KR விஜயா அவர்களுக்கு அமைந்த பாடல்)
# அடிமைப்பெண் படத்தில் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்காக அமைந்த திரைப்பட பாடல் இது . "அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி ...அவர்களே இவ் உலகின் தெய்வம்"
# தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை....
# Thiyagaraja bhagavathar - Movi-HARIDAS- அன்னையும் தந்தையும் தானே, பாரில் அண்ட சராசரங்கள்
# கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ - Song from Annai வேளாங்கண்ணி
# எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரிமாதா "படம் -மிஸ்ஸிஅம்மா"
# நீலக் கடலின் ஓரத்தில் - Neelakadalin - Song from அன்னை வேளாங்கண்ணி
தமிழுக்கு அது (RAHI தேவையில்ல போலிருக்கிறது
சோகமான "அம்மா" பாட்டுக்கள் :-sentimental song about a mother

# நடிகர் கார்த்திக் அவர்களுக்கு அமைந்த பாடல் :- அம்மான்னா சும்மா இல்லைட .. அவ இல்லேன்னா யாரும் இல்லே டா - hero karthik ,music Ilayaraja
# Movie:-Raam. ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நி கண்ணுறங்கு …(அம்மா என்னும் மந்திரமே அகிலுலகம் வாழ்கிறதே )
#அரண்மனை கிளியில்- இளையராஜாவின் இசையில், ராஜ்கிரண் அவர்களுக்கு அமைந்த பாடல் "உன்னை போல ஆத்த என்னை பெத்து போட்டா, என்ன பெத்த ஆத்தா கண்ணீர்தான் பாத்தா..."
#என் தாயின் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே ..என் வாயும் வயிறும் போற்றிவலத்திட்ட (ARANMANAI KILI MOVIE)RAJKIRAN.............
#சிவாஜி -ஆரரிரோ படியதரோ , தூங்கிபோனதரோ …Movi-Thaiku Oru Thalattu-
நம்ம இளைய தளபதி "விஜய் அவர்களுக்கு அமைந்த இந்த பாடல் :-Song:- தெய்வத்துக்கே மாருவேசமா,படம் -சிவகாசி.
ரஜினி அவர்களுக்கு அமைந்த சோகமான அம்மா பாட்டு "அம்மா உன் பிள்ளை நான் "-படம் தளபதி .
நல்ல பொன்னால் இதுபோலே வருமா இனிமேலே
இனிய ரசிக நெஞ்சங்களே, இந்த நிகழ்ச்சியைப்பற்றிய   உங்களது மேலான விமர்சனங்களை அள்ளித்தெளியுங்கள் ..
A9 வானொலியின் FACEBOOK-முகநூல் வாயிலாகவும் தெரிவிக்கலாம்
A9 வானொலியின் வலைத்தளத்திலும், அல்லது  மின் அஞ்சல் (E-MAIL )வழியாகவும் தெரிவிக்கலாம்  
A9 வானொலியின் "SKYPE" -என்கிற "வான்முகவின்" வழியிலும் தெரிவிக்கலாம்
 #AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU -அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்! எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேக்கிற பாக்கியம்!
# நடிகர் கார்த்திக் அவர்களுக்கு அமைந்த பாடல் :- அம்மான்னா சும்மா இல்லைட .. அவ இல்லேன்னா யாரும் இல்லே டா - hero karthik ,music Ilayaraja
#அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை (டீச்சரம்மா படத்தில் KR விஜயா அவர்களுக்கு அமைந்த பாடல்)
# அடிமைப்பெண் படத்தில் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்காக அமைந்த திரைப்பட பாடல் இது . "அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி ...அவர்களே இவ் உலகின் தெய்வம்"
# ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா ?"
#Thiyagaraja bhagavathar - Movi-HARIDAS- அன்னையும் தந்தையும் தானே, பாரில் அண்ட சராசரங்கள்

மருத்துவக்குறிப்பு சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என ஏன் அப்படி எழுதினர்???"......


மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு  சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என ஏன் அப்படி எழுதினர்???"......

வேலை, வேலை என்று, நேரம் காலம் இல்லாமல் உழைப்பதாகக் கூறிக்கொண்டு, எந்த நேரமும் அலுவலக, தொழில் கூட்டாளிகளோடு, காலத்தைச் செலவழித்துக் கொண்டு, பணம் ஈட்டுவதில் மட்டும் சிலர் குறியாக இருக்கிறார்கள். இதில் பலர் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாது... அவர்கள் இந்த உலகத்தில் பிறந்ததே, தங்கள் தொழில் மற்றும் அலுவலக பணிகளை மேற்கொள்ளத்தான் என்று வாழ்க்கை நடத்துவார்கள். பல பேர் இரவு நேரங்களிலும் விடுமுறை நாள்களிலும்கூட அலுவலகப் பணிக்காகவே நேரம் செலவிடுவார்கள். மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்று வீட்டு நினைவுகள் எதுவும் இருக்காது....வேலை.... அது மட்டும்தான் குறிக்கோள். அது மட்டும்தான் முக்கியம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்..  அப்போதும் அவர் கூறுவது என்னவென்றால் "நான் இல்லை என்றால் எனது நிறுவனம் இல்லை" ஆகவே உடனே எனது உடல்நிலையை சரிசெய்து அலுவலகம் செல்வதற்கு உதவுமாறு மருத்தவரிடம் மன்றாடுவார்கள்...... 

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு  சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என ஏன் அப்படி எழுதினர்??????????".......

"நான் இல்லை என்றால் எனது நிறுவனம் இல்லை" என்று கூறிய பலர், தனது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரையிழந்து இடுகாட்டுக் கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிரார்கள்... அப்போதும் அவர்களின் நிறுவனம் சிறப்பான நிலையில் இன்னமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது... என்று தெரிந்துகொள்ள,அது ஒரு வாய்ப்பாக அமையட்டும் என்று மருத்துவர் மருந்துச் சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என எழுதியிருந்தால்,அதற்காகஆச்சர்யப்படவேண்டிய அவசியமில்லை.

வாழ்த்துக்களுடன், உங்களோடு உறுதுணையாக  ..
ஆலோசகர்-கோகி-ரேடியோ மார்கோனி- புது தில்லியிலிருந்து.

Thursday, November 6, 2014

கதாநாயகி பாடும்போது "கால்" போடாமலும், கதாநாயகன் பாடும்போது "கால்" போட்டு பாடும்படி பாடலை அமைத்திருப்பார்

பாடலில் கவிஞ்சரின் கைவண்ணம்:- "கதாநாயகி பாடும்போது  "கால்" போடாமலும், கதாநாயகன் பாடும்போது  "கால்" போட்டு பாடும்படி பாடலை அமைத்திருப்பார்" 

கதாநாயகி (பெண் குரல்) பாடும்போது "கால்" போடாமல் பாடுவார் அதாவது...."முத்துக்களே" பெண்கள்.. "தித்திப்பதே" கன்னம்
கதாநாயகன் (ஆன் குரல்) பாடும்போது "கால்" போட்டு பாடுவார் "முத்துக்களோ" கண்கள் "தித்திப்பதோ" கன்னம்
.... படம்: நெஞ்சிருக்கும் வரை

முத்துக்களே பெண்கள்.. தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
(முத்துக்களோ கண்கள்)

படித்த பாடம் என்ன
உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப்பூவை சூடத் துடிப்பதென்ன
(முத்துக்களே பெண்கள்)

கன்னிப்பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலில் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன
(முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன
உன் கைகள் மாலையாவதென்ன
வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன
(முத்துக்களே)

படம்: நெஞ்சிருக்கும் வரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா
http://www.youtube.com/watch?v=0wBsn4F__A4&feature=share&list=PL86A6B8FDD708251D

மந்திரச் சொற்கள்" ... வாழ்க்கை"யில் அவற்றை உபயோகித்தால்

மந்திரச் சொற்கள்" ... வாழ்க்கை"யில் அவற்றை  உபயோகித்தால் ஆனந்தத்தின் எல்லை வரை சென்று வரலாம்....படிப்படியாக முன்னேறி,  வாழ்க்கையில் வெற்றி பெற,  நமக்குத்தேவை "நம்பிக்கையும்,  உத்வேகமும்" மிக முக்கியமானவை.  தடையில்லா உத்வேகத்தை,  சாதகமாக அமைத்துக்கொண்டு முன்னேற   "மந்திரச் சொற்கள்" நமக்கு பெரும் உதவியாக உள்ளன...    அப்படி என்ன சொற்கள் அவை? எப்படி, எந்தச் சொற்கள், மந்திரச்சொர்க்களாக மாறுகின்றன? அந்த சொற்களை எப்படி, எங்கு, எவ்வாறு தெரிந்துகொண்டு உபயோகப்படுத்தமுடியும்?

மறைமொழி அல்லது மந்திரச்சொற்கள் என்பது காட்டும் தன்மை உடையதே அன்றி உரைக்கும் தன்மை உடையது அல்ல..... அதாவது புத்தகத்தில் இருக்கும் சொற்கள் எடுத்துரைப்பவை என்றும், உயிர் வாய் வழி சொற்கள் "சுட்டிக் காட்டும்" தன்மையுடையது எனலாம்..... மேலும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் "வாய் வழி சொற்கள்" வழிகாட்டும் தன்மையுடையது எனலாம்.... அப்படிப்பட்ட வாய்வழி மந்திரச்சொற்கள் காட்டும் வழியை மனதில் கெட்டியாக பிடித்துக்கொண்டால் மட்டுமே முன்னேறமுடியும்..... 

1."அழகு"என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

......முதலில் உங்களின் முகத்தை "சிரித்த முகமாக" வைத்துக்கொள்ளுங்கள் பிறகு உங்களின் அலுவலகத்தில் உங்களோடு பணியாற்றும், உங்களின் மேலதிகாரியை பார்த்து வழக்கமாக சொல்லும் "வணக்கம்" சொல்லியபிறகு, இன்று நீங்கள் அணிந்திருக்கும் சட்டை புதியதா? "அழகாகவும்" பொருத்தமாகவும் உள்ளது என்று கூறுங்கள்... பிறகு பாருங்கள் நீங்கள் பேசிய அனைத்தும் மந்திரங்களாக மாறி வேலை செய்யும், உங்களின் மேலதிகாரிக்கு உங்களின்மீது ஒரு தனி மதிப்பும் மரியாதையும் ஏற்ப்படும் அதை நீங்கள் உங்களின் முன்னேற்றத்திற்க்காக  பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது, உங்களை ஒரு படி முன்னேற்றிக்கொள்ள உதவியாக இருக்கும்.   இப்படியே மேலும் மேலும் பல மந்திர சொற்களை பயன்படுத்தி மேலும் மேலும் முன்னேறுங்கள்.  (முக்கிய குறிப்பு:- மந்திர சொற்க்களை சரியான முறையில் சரியான நேரத்தில் பயன்படுத்தினால்தான் பலன் தரும். ஒருஇடத்தில் ஒருமுறை பயன்படுத்திய மந்திரச்சொல்லை திரும்ப திரும்ப அதே இடத்தில் பயன்படுத்தினால் மந்திரம் பயனற்றதாகிவிடும்) ....

விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி. 

2.""சிக்கனம்"  "என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

விலைவாசி என்றைக்கும் ஏறுமுகமாகத்தான் உள்ளது, கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளில் எந்த ஒரு பொருளும் "விலை குறைந்ததுவிட்டது"  என்கிற பேச்சுக்குகூட இடமில்லாமல் போனது.  இப்படிப்பட்ட சூழலில் "சிக்கனம்" என்பது வெறும் சொல்லாக மட்டுமே பார்க்கும்  சூழ்நிலை உள்ளது.    
அலுவலகங்களில் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பது செலவுகளை குறைப்பது என்பதைவிட, செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதுதான் சிறந்த நிர்வாகத்திரமையாகும். விரயங்களைக் குறைப்பதன் மூலமாகவே செலவினங்களைக் குறைக்க முடியும். அதாவது விரயமாகும் நேரங்களும், தேவையில்லாத செயல்பாடுகளும் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டாலே, சிக்கனமும் சேமிப்பும் கிடைத்துவிடும்.  அதாவது 100 ரூபாய் சிலவு செய்யவேண்டிய இடத்தில் 80 ரூபாயில் அந்த பணியை திறம்பட செய்து முடிப்பதுதான் " சிக்கனத்தின்" இலக்கணம். 

உங்களின் அலுவலக மேலதிகாரியிடம் சென்ற வருட செலவுகளில் 20%சதவிகிதம் குறைத்து மீதமுள்ள 80%சதவிகிதத்துக்குள் இந்த வருட செலவுகளை கட்டுக்குள் வைப்பேன் என்று சொல்லுவதோடு செயலிலும் செய்து காட்டுங்கள். பிறகு பாருங்கள் "சிக்கனம்" என்கிற சொல் மற்றும் செயலின் மந்திர சக்தியை நீங்களும் உணருவீர்கள்.  நூற்றுக் கணக்கில் செய்யப்பட்ட சின்னச் சின்ன திருத்தங்கள், இலட்சக்கணக்கான செலவுகளை மிச்சம் செய்ய வழி வகுத்தது. எனவே, தொலைநோக்குடன் திட்டமிட்டு, உரிய மாற்றங்கள் செய்யும் வாய்ப்பு வசதிகளோடும் உங்கள் நிதியாண்டுத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துங்கள். அதன் வழியாக மிகச் சிறந்த மாற்றங்களைக் கண்கூடாகக் காணமுடியும்.

விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி.

3. "முன்னேற்றம்"  "ஒரு அடி முன்னே" என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

"நாம் ஒரு அடி முன்னே எடுத்துவைத்தால் உலகம் நம் அருகில் வந்து நிற்கும் என்று மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கம் கொடுத்தேன்". சொன்னவர் "நம்பிக்கை வாசல்" என்ற அறக்கட்டளையின் நிறுவனர், 28 விருதுகளை பெற்ற மாற்றுத் திரனாளியான   "ஏகலைவன்" என்பவர். 

நம்மால் முடியுமா?  என்கிற சந்தேக யோசனையில் இருக்கும் எந்த ஒரு செயலும் நிறைவு பெற்றதாக சரித்திரமில்லை. நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில் நாம் "ஒரு அடி முன்னே" சென்று செயலாற்றும்போது அந்த செயல் படிப்படியாக சிறப்பான முறையில் நடப்பதோடு நமக்கு  வெற்றியையும் தேடித்தரும்.  ஆகவே எந்த ஒரு செயலாக இருந்தாலும் என்னால் இதை திறம்பட செய்ய முடியும் என்கிற நம்பிக்கையோடு ஒரு அடி முன்வைத்து ஆரம்பித்துவிடுங்கள். பிறகு பாருங்கள் எந்த செயலையும் என்னால் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையூட்டும் நிலையை நீங்கள் அடையமுடியும். ஆகவே  எப்பொழுதும் "ஒரு படி முன்னே" என்பது உங்களின் தாரக மந்திரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். 

விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி. 

4. "நிதானம்", (நிதானமே பிரதானம்)  என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

இந்த மந்திரம் உங்களுக்காக, நீங்கள் நினைவில் வைத்து சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல்லாகும். 

"நிதானம் என்பது வேகத்தோடு சம்மந்தப்பட்ட சொல்லாக இருந்தாலும், நான் இங்கு குறிப்பிட வந்தது உடல் நலம், அது சிறப்பாக இருந்தால் எதையும் நம்மால் சாதிக்க முடியும். 

அதாவது ஒவ்வொரு முறையும் நாம், நமது உணவை உட்கொள்ளும்போது நமக்கு நாமே நினைவில் நிறுத்தி சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல் இது. 

இந்த அவசர யுகத்தில் அவசர அவசரமாக சரியாக மென்று தின்று விழுங்காத உணவுப்பழக்கத்தினால் செரிமானம் கேட்டு, உடல் நலத்தோடு மனநலமும் கெட்டுப்போவதால் ஏற்ப்படும் விளைவுகளுக்கு ஒரு அளவு என்பது இல்லை. அது எப்படிப்பட்ட இழப்புக்களை உருவாக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.  ஆகவே ஒவொரு முறையும் உங்களின் உணவை நீங்கள் உட்கொள்ள ஆரம்பிப்பதிலிருந்து உணவை உண்டு முடிக்கும்வரை இந்த "நிதானம்"....(நிதானமாக உணவை நன்கு மென்று விழுங்கவேண்டும்)  என்கிற மந்திரத்தை நினைவில் நிறுத்தி செயல்படவேண்டிய கட்டாய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த மந்திரத்தின் தன்மையையும் அதன் சக்தியையும் நீங்கள் உணர்வீர்கள் என்றால், நீங்கள்  மிகப்பெரிய பயனை பெற்றவராவீர். 

விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி.

5. "வெற்றி" (எதிலும் வெற்றி)  என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

வெற்றியைக் கரம்பற்ற நாம் மூன்று படிகளில் ஏறினால் போதும். அந்த மூன்று படிகள்… ‘ஆசைப்படு-ஆசைப்படுவதை அடையமுடியும் என்று நம்பு – அந்த நம்பிக்கை நிறைவேறும் வரை இடையறாது செயற்படு’. இதுதான் வெற்றிக்கான மூலமந்திரம். இந்த சூத்திரத்தின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால் போதும். வெற்றித் தேவதையின் கைகளில் இருக்கும் மாலை ஒரு நாள் உங்கள் கழுத்தை அலங்கரிக்கும்..

வெற்றி என்கிற கனவு காணுங்கள். தீவிரமாகக் காணும் கனவுகள், எண்ணங்களாக மாறி ஒருநாள் நிச்சயம் நனவாகும். உந்துதலோடு செயர்ப்படுவதர்க்கு  ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு தேவை’ என்கிறார், அறிவியல் விஞ்ஞானி திரு.அப்துல் கலாம் அவர்கள்... ......அதே நேரத்தில் வெற்றிக்கு வழி என்ன?’ என்ற தேடலிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடலாகாது. அதோடு  வெற்றி என்பது சிலருக்கு மட்டுமே ஆண்டவன் விசேஷமாய் வழங்கும் ஆசீர்வாதமில்லை. ஆகவே வெற்றி என்பதை எப்போதும் தாரக மந்திரமாக நினைத்து உச்சரிப்பதொடு அதன் பாதையில் தொடர்ந்து  பயணிக்கவேண்டும்.

விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி.

FREE JOBS EARN FROM HOME